குடும்ப புகைப்படத்தை முகநூலில் பதிவிடுபவரா? உஷார்!

facebook under watch

மதுரை விரகனூரைச் சேர்ந்தவர் ராமன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் தனது மனைவி மற்றும் 13 மற்றும் 11 வயதான இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த ராமன் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார். அப்போது அவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த செல்வா என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்வா மீது ஒத்தக்கடை போலீசாரிடம் புகார் அளித்தார். தனது புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக, அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில், செல்வா மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக செல்வா மதுரைக்கு வந்தபோது, ராமன் நேரில் பார்த்து இருவரும் பழகிவந்தனர். இதனிடையே இளம்பெண் கொடுத்த புகார் ஜாமீன் எடுக்க, ரூ. 50 ஆயிரம் மற்றும் இரு ஜாமீன்தாரர்கள் ஏற்பாடு செய்துகொடுக்குமாறு ராமனிடம் செல்வா கேட்டுள்ளார்.

இதற்கு அவர் மறுத்தபோது, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையில் ராமன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்த தனது குடும்பத்தினரின் குழு புகைப்படத்தில் இருந்து அவரது இரு பெண் குழந்தைகளின் படங்களை மார்பிங் செய்து, அவதூறு செய்துள்ளார்.

மேலும், ராமனின் புகைப்படத்தையும் தவறாக சித்தரித்து, அவருக்கு எதிரான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். மேலும் இதனை நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என செல்வா மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மதுரை மாவட்ட எஸ்பிக்கு ஆன்லைனில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் செல்வா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories