ஃபேஸ்புக் மூலம் பல பெண்களுடன் பழகி.. ஏமாற்றிய சிறைக்காவலர்!

facebook under watch

வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார் ஒரு பெண்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் போது நேரில் சந்தித்து உள்ளனர்.

அப்போது அந்த இளம்பெண்ணிடம் தனக்கே உரிய பாணியில் காதல் வார்த்தை பேசி அள்ளி வீசுகிறார் கணேஷ்குமார்.

தன் காதலனை நம்பி அந்த இளம் பெண்ணும் அவரின் அழைப்பை ஏற்று வேலூருக்கு செல்லவே, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறி இருக்கிறார் சிறைக்காவலர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

பின்னர் மயக்க நிலையில் ஆடைகளின்றி இருந்த பெண்ணை, செல்போனில் படம் எடுத்து கொண்ட அவர். அதை காட்டி மிரட்டியே பல முறை அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறவே தன் நிஜ முகத்தை காட்டி இருக்கிறார் சிறைக்காவலர். உன்னை போலவே பல பெண் என் லிஸ்ட்டில் இருக்கிறார்கள் எனக் கூறி செல்போனை காட்டியுள்ளார்.

அதில் ஏராளமான பெண்களின் நிர்வாண போட்டோக்கள், வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார் அந்த பெண். இதனிடையே சிறைக்காவலருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவே. அவரின் ஊருக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.

ஆனால் அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை விரட்டி அடிக்கவே. செய்வதறியாது திகைத்து போன அவர், காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது அவருக்கு.

ஜெயில் வார்டன் எனக்கு போலீஸ் மட்டுமின்றி ரவுடிகளும் நிறைய பேரையும் தெரியும் என கூறியுள்ள சிறைக்காவலர் அவர்களை வைத்தே உன் கதையை முடித்து விடுவேன் எனக் கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இருந்தபோதிலும் தன்னைப்போல ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியலை எல்லாம் சேகரித்துள்ளார் அந்தப் பெண். பெங்களூருவில் செவிலியர், ராணிப்பேட்டையில் கல்லூரி மாணவி என சிறைக் காவலர்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பட்டியலை சேகரித்த அந்தப் பெண் அதையெல்லாம் ஆதாரமாக மாற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இவர்கள் எல்லோருமே பேஸ்புக் மூலமாக பழகி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பணக்கார வீட்டுப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்து, உல்லாச வாழ்க்கையிலும் சிறை காவலர் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் அதிர்ந்து போன போலீசார் சிறை காவலர் கணேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் தலைமறைவான அவரை தேடும் பணி நடைபெற்று வந்தபோதிலும் இந்த விவகாரம் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வேலூரில் இருந்து வந்தவாசிக்கு அவரை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அவர் பணிக்கு வராததால் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை ?

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறைக்காவல் இந்த செயலால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories