செப்.16: தமிழகத்தில் இன்று… 5652 பேருக்கு கொரோனா; 57 பேர் உயிரிழப்பு!

Published:

corona-image
corona-image

தமிழகத்தில் இன்று 5652 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 57 பேர் கொரானா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இன்று வெளியான சுகாதார துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில், இன்று, 5,652  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 983 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது இதையடுத்து இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,560  ஆக அதிகரித்துள்ளது 

கொரோனா காரணமாக இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர் தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் அரசு மருத்துவமனைகளில் 34 பேரும் உயிரிழந்துள்ளனர் இதையடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக  அதிகரித்துள்ளது 

தமிழகத்தில் இன்று 5,768 பேர் Covid-19 தொற்றின் பாதிப்பில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, இதுவரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. 

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப் பட்டவர் விவரம்:

district-wise-corona-details-sep-16
district-wise-corona-details-sep-16

Related articles

Recent articles

spot_img