மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்! ஸ்டாலினுக்கும் தான்!

Published:

mamta banarjee
mamta banarjee

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக தங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் கூட்டணி என்று இன்று அறிவித்துள்ளது. ராகுல்காந்தி ஜிந்தாபாத்..!

அதாவது காங்கிரஸ் மமதாவை திராட்டில் விட்டுவிட்டார்கள். ஆனால்.. சுடலை தன் எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் பீஹாரி பிராமணன் ப்ரஷாந்த் கிஷோர்.. இரண்டு நாட்களாக TMC, காங்கிரஸ் கூட்டணிக்காக டெல்லியில் உட்கார்ந்து கொண்டு ஆண்டோனியோ மெய்னோவிற்கு மஸ்கா அடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்… எப்போதும் போல் தன் தந்திரத்தை காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளது.

இதன் பின்னால் என்ன கணக்கு காங்கிரஸ் போடுகிறது என்றால்.. இடதுசாரிகளுக்கு மேற்கு வங்கத்தில் 17% ஓட்டு உள்ளது. காங்கிரஸிற்கு 10 முதல் 12% ஓட்டு உள்ளது. ஆகவே அப்படியே லம்ப்பாக 27 முதல் 30% ஓட்டுகளை அள்ளிவிடலாம் என்பதுதான்.

இது எந்த அளவு நகைப்புக்குரியது என்பது மேற்குவங்கத்தின் இன்றைய காலகட்டத்து அரசியலை கவனிப்பவர்களுக்குப் புரியும். இதனால் தேசத்திற்கு நன்மைதான். அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கம் பிஜேபியின் கையில்இருந்தால் அதன் பழைய தேசபக்தியை மீட்டெடுக்க உதவும்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

ஒரே சமயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கம்னாட்டீஸ்களுக்கும் ஆப்பு… அகம்பாவம் பிடித்த பெண்மணிக்கும் வேட்டு. எப்போதுமே ராகுல்காந்திக்கும், அவர் எடுக்கும் முடிவுகளுக்கும்.. பிஜேபி கடமைப்பட்டிருக்கிறது.

மீண்டும் ராகுலையே தலைவராகத் தேர்ந்தெடுத்த 99.9 % காங்கிரஸ்காரர்களுக்கு பல கோடி நன்றிகள்..!

  • எஸ்.பிரேமா

Related articles

Recent articles

spot_img