December 6, 2025, 12:05 PM
29 C
Chennai

மார்ச் 20: இன்று உலக மகிழ்ச்சி தினம்!

happiness - 2025

கட்டுரை: ராஜி ரகுநாதன்

எந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் முதலிடத்தில் உள்ளனர் என்ற ஆராய்ச்சியில் பின்லாந்து நாடு நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. மொத்தம் கணக்கெடுத்த 149 நாடுகளில் இந்தியா 139 வது நாடாக உள்ளது.

எதை வைத்து இந்த கணக்கெடுப்பு நடக்கிறது?
1. தனி மனித சராசரி வருமானம், 2. ஆரோக்கியமான ஆயுட்காலம். 3. சமூக ஆதரவு. 4. சுதந்திர உணர்வு. 5. தாராள மனப்பான்மை. 6. ஊழல் பற்றிய உணர்வுகள்.

சராசரி வருமானமும் நீண்ட ஆயுளும் மகிழ்ச்சிக்கு அடையாளமாகக் காணப்படுகின்றன. தனிமனிதன் ஒரு பிரச்சினையில் சிக்கும்போது உறவும் நட்பும் வந்து உதவுவது நிச்சயம் மகிழ்ச்சியின் அளவுகோல்தான். வாழ்வில் நமக்கு எது வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் முக்கியமான அளவுகோல். மக்கள் எந்த அளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்பது கூட ஒரு அளவுகோலே. கடைநிலைத் தொழிலாளி முதல் அரசாங்க உயரதிகாரி வரை இலஞ்சம் ஊழல் எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதும் ஒரு அடையாளமாகக் கொண்டு இவற்றை கணக்கிடுகிறார்கள்.

ஆனால் பின்லாந்தின் மக்கள் தொகை நெருக்கத்தையும் இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியையும் கணக்கில் கொண்டால் இந்த மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் வரிசையை பார்த்து நாம் அதிர்ச்சி அடையத் தேவையில்லை.

ஏனென்றால் பின்லாந்து மக்கள் தொகை 55 லட்சம் தான். இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. சென்னை நகரின் மக்கள்தொகையே 68 லட்சம். அகமதாபாத் 76 லட்சம். ஹைதராபாத் 100 லட்சம். இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 436 பேர் என மக்கள் வாழ்கிறார்கள். பின்லாந்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 18 பேர் என மக்கள்தொகை உள்ளது. \

இது ஒரு புறம் இருக்கட்டும்… மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. ஒரு தாய்க்கு தன் குழந்தையின் சிரிப்பில் மகிழ்ச்சி தெரியும். நாள் முழுவதும் வேலை இருந்தாலும் வறுமை இருந்தாலும் பெற்ற சிறுகுழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு போதும்… அத்தனை துயரங்களையும் மறந்து மகிழ்வதற்கு.

பிறருக்கு அடிமையாக இல்லாமல் யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாக வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

சிலருக்கு நல்ல சாப்பாட்டை நினைத்தாலே மகிழ்ச்சி. சிலருக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் பார்த்தால் மகிழ்ச்சி. அரசியல் தலைவரின் கொடி பிடிப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி.

எது எப்படியானாலும் இன்று உலக மகிழ்ச்சி தினம். கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இன்று ஒருநாளாவது இருக்க முயற்சிப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories