இஸ்லாமியர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவர் ஆக்கியது பாஜக.,வே!

annamalai k - 2026

திமுகவினர் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தால் 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊருக்கு இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கும் ஏனென்றால் அனைவரும் இந்த ஊரை காலி செய்து விட்டு சென்று விடுவார்கள். எனவே பொது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக., மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை பேசினார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கா. பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடந்தூர், வெட்டுகட்டுவலசு, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

அப்போது, பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசிய அண்ணாமலை, நானும் ஒரு விவசாயிதான். இதே பகுதியைச் சார்ந்தவர் தான்! உறுதியாக ஒன்று சொல்கிறேன்… அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் திமுக.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால் கோமணம் கட்டும் நிலைமைதான் விவசாயிகளுக்கு வரும்!
சட்டமன்ற உறுப்பினரின் வேலை என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு எங்கிருந்து நிதிகளைக் கொண்டு வரவேண்டும், தண்ணீர் எங்கிருந்து கொண்டு வர வேண்டும், விவசாயத்திற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும், குடிநீருக்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும்… இதுதான் சட்டமன்ற உறுப்பினரின் வேலை! திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தற்போது கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அங்கே பிரச்சாரத்தின்போது வீட்டிக்கு வீடு வேலை தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார் அதனால் இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை யோசித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

திமுகவினர் சமூக நீதி என்று சொல்வார்கள்… ஆனால் முதல்முறையாக இஸ்லாமியரை குடியரசுத் தலைவர் ஆக்கியது பாஜக தான்! பிஜேபி இஸ்லாமியருக்கு எதிரான கட்சி என்று பொய்யான விமர்சங்களை செய்து வரும் திமுக மற்றும் காங்கிரஸ், ஓர் இஸ்லாமியரை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆகவிடாமல் தடுத்தது. தற்போது இருக்கும் குடியரசுத் தலைவர் கூட தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் தான்! அவரை குடியரசுத்தலைவர் ஆக்கியதும் பிஜேபி தான்!

திமுகவினர் சமூகநீதிப் போராளிகள் என கூறி வருகின்றனர் ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரைக் கூட மாவட்ட செயலாளராக நியமித்தது இல்லை! திமுகவினர் ஒரு எம்எல்ஏ சீட்டுக்குக் கூட முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு… அதாவது தற்பொழுது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட திமுக., தன் கட்சி சார்பில் ஒரு இஸ்லாமியரைக் கூட அறிவிக்க வில்லை! கூட்டணி வேட்பாளராக முஸ்லிம்கள் இருக்கலாம்… ஆனால் திமுக வேட்பாளர்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எவருமில்லை

திமுகவினரின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தால் 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊருக்கு இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கும்! ஏனென்றால் அனைவரும் இந்த ஊரை காலி செய்து விட்டு சென்று விடுவார்கள். எனவே பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்! அதிமுக., கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக.,வுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்! எனவே அனைவரும் பாஜகவிற்கு தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories