உண்மைக் காதல்: இரு கால்களும் செயலிழந்த காதலியை மணந்த காதலன்!

marriage - 2026

இரு கால்களும் செயலிழந்த தனது காதலிக்கு துணையாக நின்று அவரை திருமணம் செய்து கொண்ட இளைஞரின் உண்மையான காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமங்களூரு மாவட்டத்தில் பக்தரஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஸ்வப்னா என்ற பெண்ணும், மனு என்ற ஆணும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 12-ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். அதன்பின் உயர்நிலை படிப்புகளை தொடர முடியாத காரணத்தால் கல்லூரி படிப்பில் இருந்து பாதியில் நின்ற மனு அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டே தனது குடும்பத்தை நடத்தியுள்ளார். அந்த சமயம் ஸ்வப்னாவும் சிக்கமங்களூரு பகுதிக்கு டைப்ரைட்டிங் படிப்பதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் திடீரென ஸ்வப்னாவின் கால்கள் செயல் இழந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனு அவரது வேலையை விட்டுவிட்டு ஷோபனாவை அழைத்துக் கொண்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார்.

ஆனாலும் எந்த மருத்துவர்களாலும் ஸ்வப்னாவின் கால்கள் செயலிழந்து போனதற்கான உண்மையான காரணம் குறித்து கண்டுபிடிக்க இயலவில்லை.

இதனால் ஸ்வப்னா தன்னை தவிர்த்து வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மனுவை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத மனு அனைத்து சூழ்நிலைகளிலும் அவருக்கு துணையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த காதல் ஜோடிகளின் திருமணம் அவர்களது கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து மனு கூறும் போது, தான் உண்மையாக காதலித்தது ஸ்வப்னாவின் மனதை தான் என்றும்,

அவரால் தற்போது எழுந்து நடக்க முடியாத சூழல் இருந்தாலும் எந்த காரணத்திற்காகவும் தான் ஸ்வப்னாவை கைவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தான் அவரை உண்மையாக காதலிப்பதாகவும், என்றும் இந்த காதல் மாறாமல் அவருக்கு துணையாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்வப்னா கூறும் போது, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தான் கூறியும் மனு சம்மதிக்காமல் தனக்கு துணையாக நின்றதாகவும், மனுவை திருமணம் செய்து கொண்டதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு தடைகளை கடந்து தனது காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடிகளின் காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Topics

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

Entertainment News

Popular Categories