வாக்களிக்க அழைப்பிதழ் என்ற தலைப்பில் வலி-மை என்று குறிப்பிடப்பட்டு ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
அதில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அன்புடையீர் நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி மாதம் 24ஆம் தேதி 6.4.2021 செவ்வாய்க்கிழமை சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்… தங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாங்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து மற்றும் சுற்றம் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம்
வாருங்கள்! வாக்களிப்போம்!
தங்களன்புள்ள
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் கையொப்பம் என்று குறிப்பிடப்பட்டு வெளியாகியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.