வாங்காத விருதை திருப்பி தந்து… சமூகத் தளங்களில் கேலிக்கு ஆளான வைரமுத்து!

vairamuthu award
vairamuthu award

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்! எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள்! விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என்று, சினிமா பாடல் கவிஞர் வைரமுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மலையாள இலக்கிய வட்டாரத்தில் மிக உயர்ந்த மதிப்புக்கு உரியதாகக் கருதப் படும் ஓஎன்வி இலக்கிய விருது இந்த வருடம் ஓஎன்வி அகாடமியினரால் தமிழ் சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், கேரளத்தில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். #மீடூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவுக்கு விருது அறிவித்து, ஓஎன்வி.,க்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டதாக சினிமா உலகிலும் பலர் குரல் கொடுத்தனர். இதை அடுத்து, இது குறித்து மறுபரிசீலனை செய்வதாக, ஓஎன்வி அகாடமி அறிவித்தது.

Vairamuthu 1
Vairamuthu 1

இந்நிலையில், சமூகத் தளங்களில் வைரமுத்து விவகாரம் இன்று பெரிதும் எதிரொலித்தது.

வைரமுத்துவிற்கு விருதுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இப்போது அது மறுபரிசீலனையிலும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு விருது வேண்டாம், அதை ஏற்க மனம் விரும்பவில்லை என்று வைரமுத்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. விருதை திருப்பி தருகிறேன் என கூறியிருப்பதும், விருது தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுங்கள் என கூறியிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொடுக்கப்படாத விருதை எப்படி அவர் திருப்பி தர முடியும். அதேப்போன்று பெறாத தொகையை எப்படி அவர் திருப்பி தர முடியும் என பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மறுபரீசலனையில இருக்கிற விருதை ஒருத்தர் எப்படி திரும்ப தர முடியும்? அப்பறம் நிவாரண நிதிங்கறது சொந்தக் காசில தரது தானே? வராத விருதுக் காசை எப்படி தர்மம் செய்ய முடியும்?

எனக்கு கிடைத்த நோபல் ஞானபீட பாரத ரத்னா போன்ற பல விருதுகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். வைரமுத்து இப்படி பீலா விடும் போது நான் விடக்கூடாதா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories