விதிமீறல் என 22 செலான்கள்… போலீஸாரை அதிரவைத்த இளம்பெண்!

Published:

young girl got violations chellan
young girl got violations chellan

அந்த இளம்பெண்ணுக்கு விதிமீறல்களுக்காக 22 சலான்கள் விநியோகித்துள்ளனர் போலீஸார். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டுப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் பெற்றோரை அழைத்து… வேறென்ன வசூலை முடித்து, அட்வைஸ் மழை பொழிந்து அனுப்பியுள்ளனர்.

போக்குவரத்து விதிகளைக் கண்டுகொள்ளாமல் இஷ்டம் போல் அலைந்து திரிந்த அந்த இளம்பெண்ணுக்கு போலீஸார் பெருமளவில் விதிமீறல்களுக்கான சலான்களை விதித்தார்கள். பின்னர் அந்தப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து பெற்றோர் முன்னிலையில் அபராதக் கட்டணத்தை வசூல் செய்தார்கள்.

ஹெல்மெட் இல்லாமல் டிரைவிங், செல்போன் டிரைவிங் போன்ற பல காரணங்களுக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து அந்தப் பெண்ணுக்கு கவுன்சிலிங் வேறு கொடுத்தார்கள்.

போக்குவரத்து விதிகளை மீறினால் எப்படிப்பட்டவர் ஆனாலும் சரி டிராபிக் போலீசார் விடுவதில்லை. அதுவும் இந்த கொரோனா கால நெருக்கடி நிலையில், விஐபி.,களிலிருந்து சாமானிய மனிதர்கள் வரை அனைவருக்கும் அபராதம் விதிக்கிறார்கள்.

அண்மையில் ஓர் இளம்பெண்ணுக்கு வந்த சலான்களின் எண்ணிக்கை டிராபிக் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் இளம்பெண் ஒருவர், டிராபிக் நிபந்தனைகளை மீறி போலீசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்த இளம்பெண் ஸ்கூட்டியில் போக்குவரத்து விதிகளைக் கண்டுகொள்ளாமல் பயணித்து வந்தார். அதனால் அவருக்கு 22 முறை சலான்கள் விதிக்கப்பட்டன. அதில் செல்போன் டிரைவிங் ஹெல்மெட் இல்லாமல் பயணித்தது போன்றவை மிக அதிக அளவில் அபராதத்துக்கு ஆளாயின. குக்கடபல்லி போலீசார் சலான்களின் அபராதக் கட்டணமாக அந்த இளம்பெண்ணின் பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் ரூ.9,070 வசூலித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img