December 5, 2025, 6:59 PM
26.7 C
Chennai

யாத்ரா 2ஆம் பாகம்! ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு!

jegan mohan reddy
jegan mohan reddy

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்ரா’ இரண்டாம் பாகம் எடுக்க தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.

இந்திய சினிமாவில் இது ‘பயோபிக்’ காலம். அதுவும் அரசியல் தலைவர்களின் அதிகமான ‘பயோபிக்’ திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘யாத்ரா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி. எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில் ஒன்றில் உயிரிழந்தார். அந்த சோகம் அம்மாநிலம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Screenshot 2021 0702 205547 - 2025

ஆந்திர முதல்வர்களில் என்டிஆருக்கு பிறகு மக்கள் செல்வாக்கு கொண்ட நபராக அறியப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. இதனையடுத்தே ‘யாத்ரா’ படம் எடுக்கும்போதே ஆந்திராவின் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தப் படத்தை ஒய்எஸ்ஆர் மகள் ஷாஷி தேவி ரெட்டி தயாரித்திருந்தார். இதில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ரூ.28 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

மஹி வி ராகவ் இயக்கத்தில் தேர்தலுக்கு முன்பு வெளியான இத்திரைப்படம் ஒய்எஸ்ஆர் மகன் ஜெகன்மோகனுக்கு நன்றாகாவே கைகொடுத்தது.

jegan mohan - 2025

இந்த நிலையில், ‘யாத்ரா’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டாம் பாகத்தில் ஒய்எஸ்ஆர் வாழ்க்கையை பற்றி எடுக்க போவதில்லையாம்.

ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘யாத்ரா’ இரண்டாம் பாகம் எடுக்க போவதற்காக தெரிவிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் ஒய்.எஸ்.ஆர் வேடத்தில் மம்முட்டி வாழ்ந்திருந்த நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில், ‘ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ வெப் சீரிஸில் நடித்திருந்த ப்ரதிக் காந்தி நடிக்க இருக்கிறார்.

ganthi - 2025

இயக்குநர் மஹி வி ராகவ் ஏற்கெனவே ப்ரதிக் காந்தியை சந்தித்து ஸ்கிரிப்டை விவரித்துவிட்டதாகவும், இதில் கதை பிடித்துவிட்டு, நடிகர் ப்ரதிக் காந்தி உடனே படத்துக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் தெலுங்கு முன்னணி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக சாயலில் ப்ரதிக், ஜெகனுடன் நன்றாகவே ஒத்துப்போவார் என்பதால் இயக்குநர் மஹி வி ராகவ் அவரை நடிக்க வைக்க முதலில் அணுகியுள்ளார் என்றும், முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ‘பான்-இந்தியா’ திரைப்படமாக தயாராகும் என்றும் கூறியுள்ளார்கள்.

jegan - 2025

நாடு முழுவதும் ப்ரதிக் ‘அறியப்படும் நாயகராக’ இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என படக்குழு கூறியுள்ளது. என்றாலும், உடனே இந்தப் படத்தை தொடங்கவில்லையாம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் மஹி வி ராகவ் தற்போது ஒரு காமெடி படத்தை எடுத்து வருகிறார். அதை முடித்த பின்பே இதற்கான பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories