திருவானைக்கா கோயில் பிரசாத ரேட்… ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயிடுச்சே! ‘விடியல்’ எப்போ?

thiruvanaikka prasada stall - 2026

ஏழைகளுக்கு எட்டா கனியான திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதம்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் – அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.

மேலும் மிக சிறிய கன்டெய்னர் பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை மிக அதிகமாக நாற்பது ரூபாய் எனவும், சர்க்கரை பொங்கல் நாற்பது ரூபாய், வடை பத்து ரூபாய் என மிக அதிக அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

மேலும் இதே அளவுள்ள பிரசாத பொருட்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏனைய திருக்கோவில்களில் பதினைந்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் திருவானைக்காவல் திருக்கோவிலில் பிரசாதத்தை கோவில் நிர்வாகமே நேரடியாக விற்பனை செய்து வருகிறது.

ஆனால் மற்ற திருக்கோவில்களில் வெளி நபர்களுக்கு பிரசாத ஸ்டால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.ஆனால் திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் பிரசாதத்தில் கொள்ளை லாபம் சம்பாத்திக்க நினைப்பது தர்மத்திற்கு எதிரானது.

மேலும் மேற்படி பிரசாத பொருட்களுக்கு பில், டோக்கன் உள்ளிட்ட எதையும் பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு திருவானைக்காவல் திருக்கோவில் நிர்வாகம் வழங்குவது இல்லை. அப்புறம் எப்படி பிரசாத விற்பனை தொடர்பான முறையான கணக்கு பரமாரிக்க முடியும்…?

மேலும் மேற்படி பிரசாத ஸ்டாலில் விலை பட்டியல் இல்லை.
திருக்கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டு போர்டு வைத்துள்ள திருக்கோவில் நிர்வாகமே, பிளாஸ்டிக் கன்டெய்னரில் தான் பிரசாதங்களை விற்பனை செய்வது கூடுதல் வேதனை.

எனவே இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் @PKSekarbabu, ஆணையர் மற்றும் திருக்கோவில் EO உள்ளிட்ட அதிகாரிகள் ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ள திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் என்பது பக்தி வேண்டி தான். வர்த்தக மையமாக மாற்ற கூடாது. ஜெய்ஹிந்த்…

  • புகழ் மச்சேந்திரன், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories