திருவானைக்கா கோயில் பிரசாத ரேட்… ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு போயிடுச்சே! ‘விடியல்’ எப்போ?

thiruvanaikka prasada stall - 2026

ஏழைகளுக்கு எட்டா கனியான திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதம்…

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரன் – அகிலாண்டேஸ்வரி திருத்தலம். இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் அலாதியானது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக திருக்கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு மிரட்சியாகின்றனர் பக்தர்கள்.

மேலும் மிக சிறிய கன்டெய்னர் பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை மிக அதிகமாக நாற்பது ரூபாய் எனவும், சர்க்கரை பொங்கல் நாற்பது ரூபாய், வடை பத்து ரூபாய் என மிக அதிக அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது உள்ளபடியே வேதனையளிக்கிறது.

மேலும் இதே அளவுள்ள பிரசாத பொருட்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏனைய திருக்கோவில்களில் பதினைந்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் திருவானைக்காவல் திருக்கோவிலில் பிரசாதத்தை கோவில் நிர்வாகமே நேரடியாக விற்பனை செய்து வருகிறது.

ஆனால் மற்ற திருக்கோவில்களில் வெளி நபர்களுக்கு பிரசாத ஸ்டால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.ஆனால் திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் பிரசாதத்தில் கொள்ளை லாபம் சம்பாத்திக்க நினைப்பது தர்மத்திற்கு எதிரானது.

மேலும் மேற்படி பிரசாத பொருட்களுக்கு பில், டோக்கன் உள்ளிட்ட எதையும் பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு திருவானைக்காவல் திருக்கோவில் நிர்வாகம் வழங்குவது இல்லை. அப்புறம் எப்படி பிரசாத விற்பனை தொடர்பான முறையான கணக்கு பரமாரிக்க முடியும்…?

மேலும் மேற்படி பிரசாத ஸ்டாலில் விலை பட்டியல் இல்லை.
திருக்கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டு போர்டு வைத்துள்ள திருக்கோவில் நிர்வாகமே, பிளாஸ்டிக் கன்டெய்னரில் தான் பிரசாதங்களை விற்பனை செய்வது கூடுதல் வேதனை.

எனவே இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் @PKSekarbabu, ஆணையர் மற்றும் திருக்கோவில் EO உள்ளிட்ட அதிகாரிகள் ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ள திருவானைக்காவல் திருக்கோவில் பிரசாதத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் என்பது பக்தி வேண்டி தான். வர்த்தக மையமாக மாற்ற கூடாது. ஜெய்ஹிந்த்…

  • புகழ் மச்சேந்திரன், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories