அன்பு வெறுப்பு சுயநலம் ஏமாற்றல் இவையெல்லாம் புத்திசாலி பிராணியாக வலம் வரும் மனிதனுக்கு மட்டுமே சொந்தம். ஆனால் ஊமை பிராணிகள் அவ்வாறல்ல. கொஞ்சம் உணவிட்டால் போதும்… இறக்கும் வரை விசுவாசத்தோடு உடன் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு தோழமையான விலங்கினை விட்டுத் தொலைக்க வேண்டும் என்று முயற்சித்தான் ஒரு முட்டாள். விலங்கு விரும்பிகள் சும்மா விடுவார்களா?
டெக்ஸாஸில் உள்ள எல்போசோ நகரத்தைச் சேர்ந்த லூயிஸ் அன்டோனியா (68) குடும்பம் சில ஆண்டுகளாக ஹஸ்கி என்ற நாய் இனத்தைச் சேர்ந்த குட்டியை வளர்த்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அனாவசியமாக உணவு போட்டு வளர்க்கிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தார்கள்.
தன்னுடைய டிரைவரின் உதவியோடு அதனை எடுத்துச் சென்று தொலைவாக விட்டுவிட்டு வர தீர்மானித்தார்கள். அந்த வளர்ப்பு நாயின் கழுத்திலிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டு உடனே காருக்குள் வந்துவிடு என்று லூயிஸ் தன் டிரைவருக்கு சைகை செய்தான்.
பாவம் உரிமையாளர் அவ்வாறு தன்னை விட்டுவிட்டு போவதைக் கண்ட அந்த ஊமைப் பிராணி பயந்துபோனது. அந்த காரின் பின்னாலேயே வெகுதூரம் ஓடியது. அங்கேயே சற்று தொலைவில் இருந்த யாரோ ஒருவர் இது அனைத்தையும் வீடியோ எடுத்தார். அனிமல் ஷெல்டருக்கு செய்தி அளித்தார். அவர்கள் வந்து இந்த நாயை காப்பாற்றினர். 24 மணி நேரம் கடக்கும் முன்பே ஒரு நல்ல குடும்பத்தார் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டனர்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சுற்ற ஆரம்பித்தது. அதைப் பார்த்து லூயிஸையும் அந்த டிரைவரையும் நெட்டிசன்கள் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார்கள். இந்த மனிதனை தண்டிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டேக் செய்தார்கள்.
அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கார் நம்பரை டிரேஸ் செய்தனர் போலீசார். ஊமை பிராணியை சித்திரவதை செய்த குற்றத்திற்காக லூயிசை கைது செய்தார்கள்.
5 ஆயிரம் டாலர் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை கூட நீதிமன்றம் அவருக்கு விதித்தது. தலைமறைவாகியுள்ள டிரைவரை எல்போஸோ போலீசார் தேடி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…