கழற்றிவிட்ட முதலாளி… கதறியபடி பின்னால் ஓடிய வாயில்லா ஜீவன்! மரித்த மனிதநேயம்!

helpless dog - 2026

அன்பு வெறுப்பு சுயநலம் ஏமாற்றல் இவையெல்லாம் புத்திசாலி பிராணியாக வலம் வரும் மனிதனுக்கு மட்டுமே சொந்தம். ஆனால் ஊமை பிராணிகள் அவ்வாறல்ல. கொஞ்சம் உணவிட்டால் போதும்… இறக்கும் வரை விசுவாசத்தோடு உடன் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு தோழமையான விலங்கினை விட்டுத் தொலைக்க வேண்டும் என்று முயற்சித்தான் ஒரு முட்டாள். விலங்கு விரும்பிகள் சும்மா விடுவார்களா?

டெக்ஸாஸில் உள்ள எல்போசோ நகரத்தைச் சேர்ந்த லூயிஸ் அன்டோனியா (68) குடும்பம் சில ஆண்டுகளாக ஹஸ்கி என்ற நாய் இனத்தைச் சேர்ந்த குட்டியை வளர்த்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அனாவசியமாக உணவு போட்டு வளர்க்கிறோமோ என்று நினைக்க ஆரம்பித்தார்கள்.

தன்னுடைய டிரைவரின் உதவியோடு அதனை எடுத்துச் சென்று தொலைவாக விட்டுவிட்டு வர தீர்மானித்தார்கள். அந்த வளர்ப்பு நாயின் கழுத்திலிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டு உடனே காருக்குள் வந்துவிடு என்று லூயிஸ் தன் டிரைவருக்கு சைகை செய்தான்.

பாவம் உரிமையாளர் அவ்வாறு தன்னை விட்டுவிட்டு போவதைக் கண்ட அந்த ஊமைப் பிராணி பயந்துபோனது. அந்த காரின் பின்னாலேயே வெகுதூரம் ஓடியது. அங்கேயே சற்று தொலைவில் இருந்த யாரோ ஒருவர் இது அனைத்தையும் வீடியோ எடுத்தார். அனிமல் ஷெல்டருக்கு செய்தி அளித்தார். அவர்கள் வந்து இந்த நாயை காப்பாற்றினர். 24 மணி நேரம் கடக்கும் முன்பே ஒரு நல்ல குடும்பத்தார் அந்த நாயை தத்தெடுத்துக் கொண்டனர்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சுற்ற ஆரம்பித்தது. அதைப் பார்த்து லூயிஸையும் அந்த டிரைவரையும் நெட்டிசன்கள் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார்கள். இந்த மனிதனை தண்டிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டேக் செய்தார்கள்.

அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு கார் நம்பரை டிரேஸ் செய்தனர் போலீசார். ஊமை பிராணியை சித்திரவதை செய்த குற்றத்திற்காக லூயிசை கைது செய்தார்கள்.

5 ஆயிரம் டாலர் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை கூட நீதிமன்றம் அவருக்கு விதித்தது. தலைமறைவாகியுள்ள டிரைவரை எல்போஸோ போலீசார் தேடி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories