சிறுமிகளை குறிவைத்து பாலியல் கொடுமை.. முகநூலில் தூண்டில் போட்டு பிடித்த பெண் காவலர்! குவியும் பாராட்டு!

lady police
lady police

தில்லி போலிஸாருக்கு கடந்த ஜூலை 30ம் தேதி அரசு மருத்துவமனை ஒன்றிலிருந்து, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்படச் சிறுமியைச் சந்தித்து அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிறகு இதுகுறித்து முதலில் புகார் கொடுக்கப் பெற்றோர் தயங்கியுள்ளனர். பின்னர் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து துணை ஆய்வாளர் பிரியங்கா சைனி தலைமையில் விசாரணை துவங்கியது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஒரு நபர் சிறுமிக்கு அறிமுகமாகியது தெரியவந்தது.

அந்த நபரின் பெயரைக் கொண்டு, சமூகவலைத்தளங்களில் 100 பேரின் புகைப்படங்களை முகநூலில் தேடி எடுத்து, சிறுமியிடம் காண்பித்துள்ளார் துணை ஆய்வாளர் பிரியங்கா சைனி. அப்போது சிறுமி குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து, போலியாக முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி, அந்த நபரிடம் நட்பாக பழகி வந்துள்ளார் பிரியங்கா சைனி. பின்னர் அவரிடம் நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜூலை 31-ம்தேதி இரவு 7.30 மணிக்கு தஷ்ரத்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். அப்போது அங்கு மாற்று உடையில் போலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர், அந்த நபர், துவாரகா செக்டார்-1 பகுதிக்கு வருமாறு பிரியங்காவிடம் கூறியுள்ளார். இதையடுத்துயடுத்த சில நிமிடங்களில், ஸ்ரீமாதா மந்திர் மஹாவீர் என்கிளேவுக்கு வருமாறு பிரியங்காவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரும் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த அந்த நபரை மாற்று உடையில் இருந்த போலிஸார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தவர் துவாரகா பகுதியில் உள்ள வளையல் கடையில் வேலை செய்பவர் என போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 15 மாதங்களில் ஆறு சிறுமிகளிடமும் பழகிவந்தது தெரியவந்துள்ளது.

போலியான பெயரைப் பயன்படுத்தி, சிறுமிகளிடம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் அவர்களுடன் பழகுவதைத் தவிர்த்துவந்துள்ளார்.

இப்படிச் செய்தால் போலிஸிடம் சிக்காமல் இருக்கலாம் என விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளியை பிடித்த பெண் போலிஸாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories