December 6, 2025, 2:02 AM
26 C
Chennai

அலகு குத்தி நேர்த்தி கடன்! கிரேனிலிருந்து தவறி விழுந்த இளைஞர்..!

kavadi
kavadi

ஆடிக்கிருத்திகை பண்டிகையான அன்று, கிருஷ்ணகிரி அருகே நேர்த்திக்கடன் செலுத்த 40 அடி உயரத்தில் கிரேனில் அலகு குத்தி சென்ற இளைஞர் திடீரென கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகைன்று முருகப்பெருமானுக்கு பக்தர்கள் சிலர் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், இந்த வழிபாட்டுக்கு தடை இருந்தது.

இந்த ஆண்டு நோய் தொற்று ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும்கூட, கடந்த சில தினங்களாக பரவல் அதிகரித்திருப்பதனால் இந்த ஆண்டும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாக்களுக்கு அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் முக்கிய முருகர் ஆலயங்களில் ஆடிக்கிருத்திகை விழா பக்தர்கள் கூட்டம் இல்லாமல் அபிஷேக ஆராதனைகளுடன் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எட்றப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகர் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.

இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் உட்பட 4 நபர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு பம்பை முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

kavadi 1
kavadi 1

மேட்டுப்பாளையம் பகுதியை அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக நிலைதடுமாறி கிரேனிலிருந்து ஆகாஷ் மட்டும் அப்படியே கீழே விழுந்தார்.

தான் கீழே விழுவதை உணர்ந்துகொண்ட ஆகாஷ் தண்ணீரில் குதிப்பது போல் தரையில் குதித்தார். இதனால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிகழ்வையடுத்து நேர்த்திக்கடன் செலுத்த கிரேனில் சென்ற மற்ற மூவரும் கீழே இறங்கி நடந்து சென்று கோவிலில் சாமி தரிசனம் சென்று வீடு திரும்பினர்.

இதன் வீடியோ காட்சி வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முருகப்பெருமானின் கருணையாலும், அருளாலும், அவரை நம்பியவர்கு முன்நின்று காக்கும் தெய்வம் கந்தன் என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாஙியுள்ளதை பக்தர்கள் உணர்ந்து பரவசமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories