December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

thirupathi-temple
thirupathi-temple

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான சிறப்பு அதிகார குழு கூட்டம் தலைவர் ஜவகர் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்குப்பின் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலையில் காற்று மாசு அடைவதை தடுக்கும் விதமாக பசுமை எரிசக்தி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

இதற்காக முதற்கட்டமாக தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சாரத்தில் இயங்கும் 35 என்எக்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு போக்குவரத்திற்கு வழங்கப்படும். ஏழுமலையான் நைவேத்திய பிரசாதத்திற்காக நாட்டு மாட்டு பசும்பால் பயன்படுத்தப்பட உள்ளது. 25 நாட்டு மாடுகள் பக்தர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அவை விரைவில் திருமலைக்கு கொண்டு வரப்படும்.

சுவாமி பிரசாதத்திற்கு 30 கிலோ நெய் தேவை. இதற்கு 250 முதல் 300 மாடுகள் தேவை. ஏழுமலைகளை பிரதிபலிக்கும் வகையில் ஏழு வகையான தேசியவகை நாட்டு மாடுகள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த மாட்டின் மூலம் வரும் பாலில் நெய் தயாரித்து பயன்படுத்தப்படும். சுவாமிக்கு தீபாராதனைக்கு பயன்படுத்த பக்தர்கள் நாட்டு மாட்டு நெய் தானமாக வழங்கலாம்.

சுவாமிக்கு பயன்படுத்தபட்ட மலர்களை கொண்டு தயார் செய்யப்பட்ட ஊதுபத்திகள் ஆகஸ்ட் 15ம் தேதி பக்தர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் 15 வகையான பஞ்சகவ்யா பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை நான்கு மாதங்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு நடைபெற உள்ள பிரமோற்சவத்தில் பக்தர்களை அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories