February 11, 2025, 11:34 AM
27.5 C
Chennai

பூமிக்கடியில் கிடைத்த சாமி சிலை! கிராம மக்கள் மகிழ்ச்சி!

perumal
perumal

விருதுநகர் மாவட்டம் புளியங்குளத்தில் வயலை உழுதபோது அங்கு பெருமாள் சிலை உள்ளிட்ட சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் உள்ள நரிக்குடியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது வயலை டிராக்டரால் உழுதார்.

பின்னர் மழை பெய்ததன் காரணமாக உழும் பணியை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து தனது வயலை பார்த்தபோது அங்கு மண்ணில் புதைந்திருந்த சுவாமி சிலைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் அங்கு கிடைக்கப்பெற்ற சிலைகளை ஆராய்ந்து அது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் என்றும் அவை பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சிலைகள் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

அமாவாசை தினத்தன்று தெய்வங்களில் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் தங்கள் கிராமத்திற்கு இனி நல்லது நடக்கும் என்றும் தாங்கள் புண்ணியம் செய்துள்ளதாக கருதிய கிராம மக்கள் சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் போன்ற பூஜைகளையும் செய்தனர்.

சாமி சிலைகளை கண்டெடுக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயைப் போல் கிராமம் முழுவதும் பரவியதை தொடர்ந்து கிராம மக்கள் சிலை கிடைக்கப்பட்ட இடத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நிதி குமார் சிலைகளை கைப்பற்ற சென்றபோது அப்பகுதி கிராமத்தினர் சிலையை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளனர்.

தங்கள் ஊரில் கிடைக்கப்பெற்ற சிலைகள் தங்கள் ஊரிலேயே வைத்து வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு சாமி சிலைகளை கிராமத்திலேயே ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் சமரச பேச்சில் ஈடுபட்டதால் கிராமமக்கள் சிலையை அங்கிருந்து எடுத்து செல்ல அனுமதித்தனர்.

தற்போது திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் சாமி சிலைகள் அம்மாவாசையன்று கிடைக்கப் பெற்றுள்ளதால் தங்களுக்கு புண்ணியம் கிடைத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories