srija
srija

திருவனந்தபுரத்தில் திருச்சூர் மாவட்டத்தில் புதுக்காடு பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீஜா.

இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட குடும்பநல மையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

நர்ஸ் ஸ்ரீஜா வாரவிடுமுறையில் வீட்டில் இருந்த காலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவசர அவசரமாக கத்தி கதறிய படியே எடுத்து வந்தார்.

அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக கருதிய தாய் கத்தி அழுதுகொண்டே இருந்தார். குழந்தையை கையில் வாங்கியதும் அந்த குழந்தை கொரோனாவால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்ததை புரிந்து கொண்டார்.

உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கவேண்டும் என்பதையும் அனுபவத்தில் உணர்ந்த நர்ஸ் சுதாரித்துக் கொண்டு அக்குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி சிகிச்சை செய்தார்.

இப்படி தொடர்ந்து பலமுறை செய்ததால் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அந்தக் குழந்தை மெதுவாக கண் திறந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

தற்போது அந்தக் குழந்தை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால் தான் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது என நர்சுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்த நர்ஸ் ஸ்ரீஜா இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாயின் தோளில் குழந்தை மயங்கிய நிலையில் இருந்த போதே அதன் நிலையை புரிந்து கொண்டேன்.

கொஞ்சம் தாமதம் செய்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இதனால் தாமதம் செய்யாமல் எனக்கு கொரோனா ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக் கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கை சுவாசம் அளித்தேன். குழந்தையின் உயிர்தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாசம் அளித்த ஸ்ரீஜா தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending