பொய் கூறும் செந்தில் பாலாஜி: சாடும் தங்கர்பச்சான்!

Published:

tankar patchan - 2026

அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது.,

எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப் பின் மன்னிப்பு கோருவதாகவும், இரண்டாவது முறையாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ஒன்றுக்கு சட்டமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதிலளிக்க மறுக்கின்றார்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்த்துக்கோரி அல்ல மாதாந்திர மின் மின் கட்டண முறையை செயல்படுத்தாதினால்தான் மின் கட்டணமாக செலுத்த வேண்டி உள்ளது என்பது குறித்துதான்.

முதலமைச்சர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும், திமுக தேர்தல் அறிக்கையிலும், மக்களிடத்திலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கிறேன். இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் பிரச்சனை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இப்போதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன்’ என ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img