ட்ரோனில் இருந்து உணவை கிழே தள்ளிய காகம்! வைரல்!

crow
crow

ஆஸ்திரேலியாவில் ட்ரோன்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு மேற்கொண்ட நிலையில், வானில் பறந்து சென்ற காகம் அதனை சண்டையிட்டு கீழே தள்ளிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய சூழலில் வீட்டில் விதவிதமாக சமையல் செய்து சாப்பிடும் பழக்கம் அனைத்தும் மறைந்துப் போய் கொண்டிருக்கிறது. யாராவது உறவினர் வந்தாலும், வீட்டில் விஷேசம் என்றாலும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் மட்டும் தான் நாம் உணவுகளை ஹோட்டலில் ஆர்டர் செய்து வாங்குவோம்.

ஆனால் தற்போது தவிர்க்க முடியாத நிலையில் தான் வீட்டில் சமைக்கத் தொடங்குகிறோம். அந்தளவிற்கு மக்கள் பிஸி வாழ்க்கைக்கு மாறிவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக கணவன் -மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் எனில் அவர்கள் வீட்டில் பெரும்பாலும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடும் நடைமுறைதான் இருக்கும் .

இப்படி மக்களுக்கு உணவுகளை வழங்குவதற்கு சுவிக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு விநியோக முகவர்கள் உள்ளனர். மொபைலில் ஆர்டர் செய்தால் போதும் வெறும் 30 நிமிடங்களில் நம் வீடு தேடி அனைத்து வகையாக உணவுகளும் வந்து சேர்ந்துவிடும்.

இந்நிலையில் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இன்னமும் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த உணவுகளை வழங்க வேண்டும் என்பதற்காக ட்ரோன்கள் மூலம் உணவு விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வேடிக்கையான பல நிகழ்வுகள் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் தான் தற்போது அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள ஒருவர் தனக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்திருக்கிறார். வழக்கம் போல ட்ரோன்களின் மூலம் உணவு விநியோகம் நடத்தப்பட்டுள்ளது.

வானில் உணவு பார்சலுடன் சென்ற ட்ரோனைப்பார்த்த காகம் ஒன்று, என்ன இது புதுசா இருக்கே? இதுவரை நாம் இப்படிப்பட்ட ஒன்றை பார்த்தது இல்லை என யோசித்த நிலையில், அதன் அருகில் பறந்து சென்றது. அருகில் சென்றதும் வித்தியாசமாக ஒன்று சுற்றுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காகம் டெலிவரி ட்ரோனுடன் சண்டையிடுகிறது.

இதனையடுத்து உயரத்தில் இருந்து பார்சலை கீழே போட்டுவிட்டது. மேலும் இதுபோன்ற சில நிகழ்வுகளில் பல நேரங்களில் ட்ரோனும் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்ததோடு அதனை இணையத்திலும் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள் பல கருத்துகளை கலாய்தத்துப் பதிவிட்டுவருகின்றனர்.” குறிப்பாக நிலம், கடல், ஆகாயம் …. இன்னும் சொன்னால் வேற்று கிரகத்தையும் விட்டு வைப்பதில்லை மனிதனின் சுயநலம்..”. அவ்வளவு தான் இனிமேல் காகங்களுக்கும் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது எப்படியும் பறவைகள் அழிந்துவிடும் இதற்குப் பிறகு என்றும் வானில் பறப்பதற்கு பறவைகளுக்கு எந்த சுதந்திரமும் இல்லையோ? என்ற முரட்டு ஃபீலிங் கேள்விகளும் எழுந்துவருகின்றன.

https://youtu.be/SAshKROIjtQ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories