April 18, 2025, 11:33 AM
32.2 C
Chennai

குற்றாலத்திற்கு மட்டும் தடையா..? தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து சி.ஐ.டி.யு. நோட்டீஸ்!

cutrallam
cutrallam

குற்றால அருவிகளில் குளிக்கும் நூதன போராட்டத்தை அறிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் மற்ற சுற்றுலாதலங்களை போல் குற்றாலத்திற்கு கொரோனா தளர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், குற்றாலம் மட்டும் குற்றவாளியா? குளிக்க தடை ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகள் அச்சிடப்பட்டுள்ளன.

இதனிடையே திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ள போதும் அந்தக் கட்சிகளின் தொழிற்சங்கம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் உள்ளூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்கிறது.

இதனால் அந்த ஊரில் சுற்றுலாவாசிகள் மூலம் வாழ்வாதாரம் தேடிய வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல தரப்பட்டோரும் திருப்பூர், கோவை, சென்னை, என வெளியூர்களுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் குற்றாலமே நிசப்தமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஒட்டியுள்ள போஸ்டரில், தனியார் அருவிகளின் முதலாளிகள் மீது அரசுக்கு தனிப்பாசமா என கேள்வி எழுப்பியுள்ளதுடன் வரும் 9-ம் தேதி ஆர்ப்பரிக்கும் அருவியில் சங்கமிப்போம், அனைவரும் வாரீர் என அழைப்பு விடுத்துள்ளனர்.

ALSO READ:  அழகர்கோவில் அருகே மகா பெரியவா கோவில் பூமி பூஜை!

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகாலம் ஆவதால் சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற சுற்றுலா தலங்கள் அனைத்தும் கொரோனா கால கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் வருகைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்படுவதன் பின்னணியில் தனியார் அருவிகளின் முதலாளிகள் சிலர் இருப்பதாக சி.ஐ.டி.யு. சந்தேகம் கிளப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

மாவட்ட நிர்வாகம் காவலர்களை ஷிப்ட் முறையில் பணியமர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினாலும் கூட, மது அருந்திய நிலையில் அங்கு வரும் இளசுகள் பலர், தடையை மீறி தாங்கள் குளிப்போம் என மல்லுக்கு நிற்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

இதனால் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறை அதிகாரிகளும், இதனை கவனத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறது சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம்.

ALSO READ:  ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories