ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடாதிபதியை தரிசனம் செய்த தருமபுர ஆதீனம்!

Published:

sringeri - 2026

தருமபுர ஆதீனம் ஸ்ரீ கயிலை குருமகா சந்நிதானம், சிருங்கேரி சாரதா பீட சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமியை தரிசனம் செய்தார்.

தருமபுர ஆதீனம் ஸ்ரீ கயிலை குருமகா சந்நிதானம், கர்நாடக யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பெற்ற நான்கு மடங்களுள் ஒன்றான சிருங்கேரி சாரதா பீடம் சென்று, பீடாதிபதி ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்தை தரிசனம் செய்தார்.

சிருங்கேரி மடத்தின் தலைமை அதிகாரி கவுரிசங்கர் வரவேற்றார். இதற்கு முன், பீடாதிபதி மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமியும், தமது தமிழக யாத்திரையின்போது தருமபுரம் ஆதீனத்தில் எழுந்தருளி, ஸ்ரீ சாரத சந்திர மௌலீஸ்வர பூஜை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img