பாஜக எம்.எல்.ஏ விவகாரம் காங்கிரஸ் பெங்களூரில் போராட்டம்..

500x300 1844785 17 - 2026

மகன் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ வையும் கைது செய்யக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட சித்தராமையா மற்றும் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாடால் (வயது 45) இவர் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைமை கணக்காளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அங்கிருந்து கட்டுக்கட்டாக 6 கோடியே 10 லட்சம் ரூபாய் சிக்கியது. ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல். ஏ மகன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மகன் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ மாடால் விருபாக்ஷப் பாவையும் கைது செய்யக் கோரி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்த திரண்டனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் சித்தராமையா காங்கிரஸ் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்கள் எம்.எல்.ஏ வை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனாலும் சித்தராமையா அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.

உடனே போலீசார் சித்தராமையா மற்றும் காங்கிரசாரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் அவர்களை அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories