பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து… பயணிகள் ரயிலுக்கு ‘வேட்டு’!

Published:

palaruvi express - 2026
#image_title

பாலக்காடில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இதனை கடந்த வாரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

இந்நிலையில், நெல்லை – தூத்துக்குடி பயணிகள் ரயில் இனி இயங்காது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை எக்ஸ்பிரஸ் ரயிலை விட்டு, ஏற்கெனவே இயங்கி வந்த நெல்லை – தூத்துக்குடி பாசஞ்சர் ரயிலை நிறுத்தியதை பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

திருநெல்வேலி – தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாரை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

பாலக்காடு – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரயில்வே நிா்வாகம் முதலில் அறிவித்திருந்தது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இந்த நிலையில், இந்த ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img