December 6, 2025, 2:31 AM
26 C
Chennai

அண்ணேய்… வாலப்பாடியா… எடைப்பாடியா..? பினாமிகிட்ட கேட்டு ஒழுங்காச் சொல்லு!

stalin 1 - 2025

தேசிய அரசியலில் ராகுலும் மாநில அரசியலில் ஸ்டாலினும் இன்றைய மீம்ஸ் க்ரியேட்டர்களிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறார்கள்! அதுவும் திமுக.,வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மைக் காலமாக அதிகமாகவே தடுமாறுகிறார்.

சரளமாக பிரச்னைகளைப் பற்றி தொய்வின்றிப் பேசி, மக்கள் பிரச்னைகளை மக்களின் மனத்தில் முதலில் எடுத்துச் சென்று, பின்னர் அவையில் வைத்து அவர்களின் குரல் அரசின் காதுகளில் ஒலிக்கச் செய்திட வேண்டும். அத்தகைய பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டிய மு.க.ஸ்டாலின் நினைவாற்றல் குறைவால் அவதிப்படுகிறாரா அல்லது, ஏன் எல்லாவற்றையும் தவறாகவே பதிந்துவைத்துள்ளார் என்று ஆச்சரியப்படுகிறார்கள், அவரது பேட்டிகளையும் பேச்சுகளையும் பார்ப்பவர்கள்.

பழமொழிகளை சொதப்பினார். சுதந்திர தினம் குடியரசுதினத்தை மாற்றினார். சரிதா சரிகா என்று உளறினார். பெயர்களைக் குறிப்பிடுவதில் தடுமாற்றம். தேதிகளை நினைவில் கொள்வதில் தடுமாற்றம். இப்படி எல்லாம் இருந்தும், திமுக.,வின் இளைஞரணிச் செயலராக முதுமையின் தடுமாற்றத்தில் இருக்கும் காலம் வரை இருந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டி கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

தற்போதைய லேட்டஸ்ட் தடுமாறல்… முதலமைச்சரின் ஊர் பெயரை உளறியது. சேலம் அருகே இருப்பதுதான் எடப்பாடியும் வாழப்பாடியும். வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்து அமரரானவர். சென்ற தலைமுறை வரை பலருக்கும் பழக்கமான பெயராகவே இருந்தது இந்த வாழப்பாடி.

தமிழகத்தின் முதல்வர் யார் என்று பள்ளிக் குழந்தைகளிடம் கேட்டாலும் சொல்லிவிடும் போல இருக்கிறது, ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்கு இத்தகைய தடுமாற்றம் இருப்பது அபாயகரமானது!

அவரது தடுமாற்ற்றத்தைக் கேட்டால்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், மதில் மேல் பூனையாக நின்று கொண்டிருப்பவர்களும் திமுக.,வின் நிலையை உணர்ந்து கொள்வார்கள்… இந்த லட்சணத்தில் பினாமி அரசு என்று தமிழக அரசை சொல்ல வேண்டிய தகுதி தனக்கு இருக்கிறதா என்பதை யாரோ எழுதிக் கொடுத்து இத்தனை காலம் வாசித்து வந்த அந்த எழுத்தாளரின் பினாமியாக தான் இருந்ததை உணர்ந்து கொண்டால், ஸ்டாலின் புரிந்து கொள்வார்.!

குறிப்பாக ஸ்டாலின் வாழப்பாடி என்று உச்சரிக்கும் போது, உடன் இருக்கும் துரை முருகன் கடும் அதிர்ச்சியில் திருப்பிப் பார்க்கும் அந்த ஒரு நொடிக் காட்சியை உற்று நோக்கினால், திமுக.,வினர் எவ்வளவுக்கு ஸ்டாலினால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது அவருக்கே புரியும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories