அண்ணேய்… வாலப்பாடியா… எடைப்பாடியா..? பினாமிகிட்ட கேட்டு ஒழுங்காச் சொல்லு!

stalin 1 - 2026

தேசிய அரசியலில் ராகுலும் மாநில அரசியலில் ஸ்டாலினும் இன்றைய மீம்ஸ் க்ரியேட்டர்களிடம் சிக்கிக் கொண்டு விழிக்கிறார்கள்! அதுவும் திமுக.,வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மைக் காலமாக அதிகமாகவே தடுமாறுகிறார்.

சரளமாக பிரச்னைகளைப் பற்றி தொய்வின்றிப் பேசி, மக்கள் பிரச்னைகளை மக்களின் மனத்தில் முதலில் எடுத்துச் சென்று, பின்னர் அவையில் வைத்து அவர்களின் குரல் அரசின் காதுகளில் ஒலிக்கச் செய்திட வேண்டும். அத்தகைய பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டிய மு.க.ஸ்டாலின் நினைவாற்றல் குறைவால் அவதிப்படுகிறாரா அல்லது, ஏன் எல்லாவற்றையும் தவறாகவே பதிந்துவைத்துள்ளார் என்று ஆச்சரியப்படுகிறார்கள், அவரது பேட்டிகளையும் பேச்சுகளையும் பார்ப்பவர்கள்.

பழமொழிகளை சொதப்பினார். சுதந்திர தினம் குடியரசுதினத்தை மாற்றினார். சரிதா சரிகா என்று உளறினார். பெயர்களைக் குறிப்பிடுவதில் தடுமாற்றம். தேதிகளை நினைவில் கொள்வதில் தடுமாற்றம். இப்படி எல்லாம் இருந்தும், திமுக.,வின் இளைஞரணிச் செயலராக முதுமையின் தடுமாற்றத்தில் இருக்கும் காலம் வரை இருந்துள்ளார் என்பதை சுட்டிக் காட்டி கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

தற்போதைய லேட்டஸ்ட் தடுமாறல்… முதலமைச்சரின் ஊர் பெயரை உளறியது. சேலம் அருகே இருப்பதுதான் எடப்பாடியும் வாழப்பாடியும். வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் தலைவராக இருந்து அமரரானவர். சென்ற தலைமுறை வரை பலருக்கும் பழக்கமான பெயராகவே இருந்தது இந்த வாழப்பாடி.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

தமிழகத்தின் முதல்வர் யார் என்று பள்ளிக் குழந்தைகளிடம் கேட்டாலும் சொல்லிவிடும் போல இருக்கிறது, ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்கு இத்தகைய தடுமாற்றம் இருப்பது அபாயகரமானது!

அவரது தடுமாற்ற்றத்தைக் கேட்டால்தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், மதில் மேல் பூனையாக நின்று கொண்டிருப்பவர்களும் திமுக.,வின் நிலையை உணர்ந்து கொள்வார்கள்… இந்த லட்சணத்தில் பினாமி அரசு என்று தமிழக அரசை சொல்ல வேண்டிய தகுதி தனக்கு இருக்கிறதா என்பதை யாரோ எழுதிக் கொடுத்து இத்தனை காலம் வாசித்து வந்த அந்த எழுத்தாளரின் பினாமியாக தான் இருந்ததை உணர்ந்து கொண்டால், ஸ்டாலின் புரிந்து கொள்வார்.!

குறிப்பாக ஸ்டாலின் வாழப்பாடி என்று உச்சரிக்கும் போது, உடன் இருக்கும் துரை முருகன் கடும் அதிர்ச்சியில் திருப்பிப் பார்க்கும் அந்த ஒரு நொடிக் காட்சியை உற்று நோக்கினால், திமுக.,வினர் எவ்வளவுக்கு ஸ்டாலினால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பது அவருக்கே புரியும்!

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories