விபத்தில் சிக்கி காருக்குள் ஒரு மணி நேரம் போராடிய நடிகை: காப்பாற்றிய பத்திரிகையாளர்

megha mathew in car accident2 - 2026

கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மலையாள நடிகை மேகா மேத்யூ, சரியான நேரத்தில் புகைப்பட பத்திரிகையாளரால் அடையாளம் காணப்பட்டு விரைந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

வளர்ந்து வரும் மலையாள நடிகை மேகா மேத்யூ. இவர் ஆனந்தம் படத்தில் அறிமுமானார். தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Megha Mathew 22 1 - 2026

நடிகை மேகா மேத்யு, நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, திருவனந்தபுரத்திலிருந்து கோட்டையத்துக்கு காரில் சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார்.

அவர் சென்ற கார் எர்ணாகுளம் அருகே உள்ள முளம்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்தது. இதனால் மேகா காரை மெதுவாக ஓட்டிச் சென்றாராம். ஆனாலும், எதிரே வந்த கார் ஒன்று, மேகா ஓட்டி வந்த கார் மீது இடித்து விட்டு வேகமாகச் சென்றது. இதில் மேகா ஓட்டிச் சென்ற கார் சாலையில் கவிழ்ந்தது.

கார் தலைகுப்புற கவிழ்ந்ததால், மேகா பலத்த காயம் அடைந்துள்ளார். காரை விட்டு வெளியே வர முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருக்கிறார் மேகா. இந்நிலையில், விபத்து குறித்து அறிந்து, விபத்தை படம் எடுக்க வந்த பத்திரிகை புகைப்படக்காரர், காரின் உள்ளே போராடிக் கொண்டிருப்பது நடிகை மேகா மேத்யூ என்பதையும், அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து, காரில் இருந்து மேகாவை வெளியே மீட்டுக் கொண்டு வந்து, கொச்சியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் விரைந்து அனுமதித்திருக்கிறார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை மேகாவை மீட்ட  புகைப்பட பத்திரிகையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தாம் கடவுளின் கருணையால் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி எனவும் மேகா  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories