சுங்கச்சாவடிய உடைக்கச் சொன்னதும் மோடிதான்னு சொல்லுவாரோ? வேல்முருகன் வீம்பு!

panruti velmurugan - 2026

சென்னை: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை உடைக்கச் சொன்னதும் மோடிதான்னு சொன்னாலும் சொல்லுவாரு போல இந்த வேல்முருகன் என்று குரல் எழும்பினால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட்ட பலருக்கும் இப்போது மோடி காய்ச்சல் கண்டு ஜன்னி வந்து பிடித்தாட்டுகிறது. எதற்கெடுத்தாலும் மோடி பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது.

அண்மையில் கைது செய்யப் பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று  நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி நோக்கிச் சென்ற வேல்முருகனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளியான வேல்முருகன், செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி உத்தரவின் பேரிலேயே என்னை கைது செய்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக., சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பன்ருட்டி பகுதியில் மட்டுமே அறிமுகமான வேல்முருகன், பின்னர் கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி துவங்கி, ஆட்களைத் திரட்டி அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை கைது செய்யச் சொல்லும் அளவுக்கு நாட்டின் பிரதமர் மோடி, வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார் என்ற ரீதியில் புகார் கூறியிருக்கிறார்  வேல்முருகன்.

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிலர் தாக்கினர். இதே போல நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் வேல்முருகன் உள்ளிட்ட பலர் மீது நெய்வேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட வேல்முருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் கோரி வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டு வழக்குகளிலும் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் புழல் சிறையில் இருந்து வேல்முருகன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1 COMMENT

  1. அவர் இப்போது மட்டும் சொல்லவில்லை , எப்போதோ சொல்லிவிட்டார் தான் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் மோடி தான் காரணம் என்று . மோடி பதவி ஏற்ற பிறகு இவர் எதற்கோ ரயில் மறியல் செய்தார் கிண்டியில் . இவரின் அப்பாவி (முட்டாள்? )தொண்டன் ஒருவன் கட்சி கொடியை இரும்பு கம்பியில் கட்டிக்கொண்டு வந்தான். மறியல் உணர்ச்சிவசத்தில் கொடியை ஓங்க, அது மேல் இருந்த எலக்ட்ரிக் கம்பியில் தொற்றி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் . அதுமட்டும் அல்ல , இவர் அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க !? ஏன் மோடி அரசாங்கம் நாங்கள் போராடவருவதை தெரிந்தும் மின்சாரத்தை துண்டிக்க வில்லை, தீயணைப்பு கருவியை ஏன் போலீஸ் கொண்டுவரவில்லை ? அதனால் தான் இவரின் தொண்டர் பலியானார் என்று பிளேட்டை அப்படியே மோடி மீது திருப்பினார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories