ஏன் சினிமாவில் நடிக்கிறேன் தெரியுமா..? ரங்கராஜ் பாண்டே சொன்ன விளக்கம்!

Published:

rangarajpandey - 2026

அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் படத்தில் ஏன் நடிக்கிறேன் என்பது குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளராக நிர்வாக ஆசிரியராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. அந்த தொலைக்காட்சியிலிருந்து அண்மையில் விலகிய அவர், பின்னர் சினிமாத்துறையில் கால் பதிக்கப்போவதாகக் கூறி, ஒரு படத்தில் நடிப்பதற்கான செய்தியை பகிர்ந்திருந்தார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் அடுத்து அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பாண்டே நடித்து வருகிறார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாண்டே “வினோத் என் நண்பர். அவர் கேட்டுக்கொண்டதால் இதில் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி, மே 1ம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகவுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img