December 5, 2025, 11:51 PM
26.6 C
Chennai

ரூ.1000 பரிசு! உயர் நீதிமன்ற உத்தரவால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டம்!

mylapore raton shop - 2025

சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பாக, ஆளுநர் சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்புத் துண்டு ஆகியவை வழங்கப் படுகின்றன.

இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அனைத்து கார்டுகளுக்கும் ரூ.1000 கொடுக்கக் கூடாது என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும் என்றும் கூறியது.

எந்தப் புள்ளி விவரங்களும் இல்லாமல் எப்படி ரூ. 1000 அரசு வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், பச்சை நிற குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் கட்சிப் பணத்தை எடுத்து செலவிட்டால் நாங்கள் கேட்க மாட்டோம். அரசு பணத்தை செலவிடுகிறீர்கள்… எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், ரூ. 1000 வழங்க மட்டுமே தடை விதிக்கப் பட்டதாகவும், அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கத் தடையில்லை.
என்றும் உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியது.

முன்னுரிமை பெறாத (NPHH), சர்க்கரை மட்டுமே பெறும் (NPHHS) ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது.

இதை அடுத்து, குழப்பத்தில் தவித்த அதிகாரிகள், சிறிது நேரம் கழித்து, ரூ.1000 வழங்காமல் தவிர்த்தனர். ஆனால், பொதுமக்கள் அது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்..

ஏற்கெனவே கடந்த 3 நாட்களாக பலரும் ரூ.ஆயிரத்தை வாங்கிவிட்டதால், அதுபோல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories