ரூ.1000 பரிசு! உயர் நீதிமன்ற உத்தரவால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டம்!

mylapore raton shop - 2026

சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று அரசின் அறிவிப்பாக, ஆளுநர் சட்டமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளில் அறிவித்தார். அதன்படி, பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்புத் துண்டு ஆகியவை வழங்கப் படுகின்றன.

இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அனைத்து கார்டுகளுக்கும் ரூ.1000 கொடுக்கக் கூடாது என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே கொடுக்கப் பட வேண்டும் என்றும் கூறியது.

எந்தப் புள்ளி விவரங்களும் இல்லாமல் எப்படி ரூ. 1000 அரசு வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், பச்சை நிற குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீங்கள் கட்சிப் பணத்தை எடுத்து செலவிட்டால் நாங்கள் கேட்க மாட்டோம். அரசு பணத்தை செலவிடுகிறீர்கள்… எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், ரூ. 1000 வழங்க மட்டுமே தடை விதிக்கப் பட்டதாகவும், அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கத் தடையில்லை.
என்றும் உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியது.

முன்னுரிமை பெறாத (NPHH), சர்க்கரை மட்டுமே பெறும் (NPHHS) ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியது.

இதை அடுத்து, குழப்பத்தில் தவித்த அதிகாரிகள், சிறிது நேரம் கழித்து, ரூ.1000 வழங்காமல் தவிர்த்தனர். ஆனால், பொதுமக்கள் அது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ரேஷன் கடைகளை முற்றுகையிட்டு போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்..

ஏற்கெனவே கடந்த 3 நாட்களாக பலரும் ரூ.ஆயிரத்தை வாங்கிவிட்டதால், அதுபோல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories