லயோலாவின் பொய் பித்தலாட்டம்! மன்னிப்பு கேட்டது கல்லூரி அல்ல!

loyola college art1 - 2026

கடந்த சனி, ஞாயிறு இரு தினங்களில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற வீதி விருது வழங்கும் விழா, கலை விழா, ஓவியக் கண்காட்சி இவற்றில் ஹிந்து மத விரோத கருத்துகள் பரப்பப் பட்டும், ஒவியங்களில் மோடி, பாரதமாதா, அரசின் திட்டங்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக., இவற்றை விமர்சித்தும் வைக்கப்பட்டிருந்தன.

இது மிகப் பெரும் எதிர்ப்பை கல்லூரிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. கிறிஸ்துவ மதவெறி பிடித்த லயோலா கல்லூரி நிர்வாகம் இதற்கான பின்னணியில் இருந்த போதும், எதிர்ப்பு வந்தவுடன், நிகழ்ச்சியின் பொறுப்பாளர் காளீஸ்வரன் என்பவரை கைகாட்டி ஒதுங்கிக் கொண்டது.

எதிர்ப்புகள் வலுத்ததால், காளீஸ்வரன் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி, ஊடகங்களில் கொடுத்தார். லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டு விட்டது என்று ஊடகங்களும் செய்தி கொடுத்தன. ஆனால், இந்தக் கடிதத்தில் எவர் கையெழுத்தும் இல்லை என்பது இப்போது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது.

veethi vizha loyola statement 1 - 2026

லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்கவில்லை.. யாரோ காளீஸ்வரன் என்பவர்தான் எழுதியிருக்கிறார்.. அதில் எந்த கையெழுத்தும் இல்லை… லெட்டர்ஹெட்டில் இது வெளியிடப்படவில்லை.. எவர் வேண்டுமானாலும் இப்படி ஒரு கடிதத்தை டைப் செய்து, அதில் லயோலா கல்லூரி என்று தலைப்பு வைத்து கல்லூரி நிர்வாகி யாரோ ஒருவர் பெயரைச் சொல்லி, சமூக வலைத்தளங்களில் பதிவிட முடியும். நாளை லயோலா கல்லூரி இது எங்கள் கடிதம் இல்லை என்று மறுக்கவும் முடியும்.!

எனவே, லயோலா கல்லூரியின் அறிக்கை உண்மையானதுதானா என விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த பொழுது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகத்தின் கையெழுத்து இருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது மருத்துவமனை நிர்வாகத்தின் கையெழுத்து இருந்தது.

ஆனால் லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசவிரோத நக்சல் ஆதரவு, பிரிவினைவாத சக்திகள் நடத்திய கண்காட்சிக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்டதாக சொல்லும் லயோலா கல்லூரியின் காளீஸ்வரன் அக்கையில் யாருடைய கையெழுத்து இருக்கிறது ? தேடிப் பார்த்தால், அப்படி ஒருவர் கையெழுத்து என்று எதுவும் இல்லை.

எனவே, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லைமீறும் இந்த கருத்தியல் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தேசபக்தர்கள் அணிதிரள வேண்டும். உங்களுடைய மன்னிப்பு எங்களுக்குத் தேவையில்லை. சட்டரீதியாக நீங்கள் தண்டிக்கப்படும் வரை எங்களுடைய போராட்டம், நீதிமன்றத்திலும் இருக்கும் வீதி மன்றத்திலும் இருக்கும்… என்று பொருமுகிறார்கள் ஹிந்து அமைப்பினர்.

இந்நிலையில் நாளை லயோலா கல்லூரியை எதிர்த்து, மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories