கமல் அண்ணே.. இதோ போட்டு விட்டுட்டாருல்ல திராவிட ‘புரோஹிதர்’!

07 June03 Kamal e1542363649134 - 2026

தான் பிறந்த இனத்தை, தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த இடத்தை, மண்ணை மக்களை இழிவுபடுத்தியோ கேள்வி கேட்டோ பேசினால் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உலகம் சொல்லும் என்று தன்னைத் தானே நம்பவைத்துக் கொள்வதுதான் முற்போக்குத்தனம்!

அப்படி இல்லாமல், தான் பிறந்த இனத்தை, மதத்தை, மண்ணை, மக்களை, கலாசாரத்தை நேசித்து, அதற்கு அவப்பெயர் வராமல் காத்து, தானும் மதித்து நடந்தால் அது பிற்போக்குத்தனம்! இப்படித்தான் வாழ்க்கை முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறது இந்தியாவில் கம்யூனிஸம்!

இதில், மிகத் தேர்ந்த முற்போக்குவாதி, மிகத் தேர்ந்த பகுத்தறிவுவாதி அரசியல்வாதி நடிகர் கமல்ஹாசன். என்னதான் தன் தாய் மதத்தை, தாய் வழிப் பிறப்பை, குடும்ப மரபை அவமதித்து மேடைகளில் பேசியும் நடித்தும் வந்தாலும், என்னதான் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு, குருட்டுத்தனமாக ஈ.வே.ராவிய சிந்தனைகளைப் பேசிக் கொண்டிருந்தாலும், பிறப்பொழுக்கம் குன்றிப் போய் பிறந்த குடி மறந்தாலும், அதனை வைத்தே இந்த உலகம் அடையாளமிடும்! அதனை துல்லியமாக, தெளிவாக, தேர்ந்த வகையில் செய்துவிடும் திராவிடம்! காரணம் ஈவே.ராவியம் கற்றுக் கொடுத்திருப்பது அதைத்தானே!

கமல்ஹாசன் என்னதான் தன் குடிப் பிறப்பு ஒழுக்கமான கடமைகளை அறுத்து, அடையாளத்தை அறுத்தெறிந்து, முற்போக்குத்தனம் பேசிக் கொண்டிருந்தாலும், அவரை பார்ப்பன அடையாளத்துடன்தான் திராவிடியம் காண்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் நாம் வெளிப்படுத்தியே வந்துள்ளோம். இப்போது மீண்டும் ஒருமுறை திராவிடத் திமுக., அதனை வெளிக் கொண்டு வந்துள்ளது.

அண்மையில் கமல்ஹாசன் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்து தெரிவிக்க வேண்டிய திமுக., அவரது ஜாதியை இழுத்திருக்கிறது. குடிப் பிறப்பை இழுத்திருக்கிறது,. ஜாதிக்கென்று ஒரு புத்தி இருக்கும் என்று பதிவு செய்திருக்கிறது. அந்தக் குயுக்தியை வைத்துத்தான் தம் மீது சேற்றை வாரி இறைத்துள்ளதாக அது கூறியிருக்கிறது.

//அதில் கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கியுள்ளது. நரித்தனத்தில் பெயர் போன ரத்த வார்ப்பல்லவா அவர். காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளார்//

இப்படி விமர்சித்துள்ளது முரசொலி கமலஹாசனை. அவரை என்ன சொல்லி திராவிடம் திட்டித் தீர்க்கக் கூடாது என்று பயந்து பயந்து கமல்ஹாசன் திரித்துப் பேசி வந்தாரோ அதே புள்ளியில் ஈவு இரக்கம் இல்லாமல் அடித்தே விட்டது திராவிடம்!

இப்போது அறிவாலய மடாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் முந்தைய மடாதிபதியின் வாரிசு மு.க.ஸ்டாலின், மிகச் சிறந்த வகையில் திராவிட புரோஹிதராகத் திறம்படப் பணியாற்றி வருகிறார். அவரது வாக்கின் படியே இப்போது மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு பூணூல் மாட்டி விட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஐயோ பாவம் கமல்ஹாசன்… அதனால் தான் அடித்துக் கொண்டோம்.. குணங்கெட்டவங்கூடல்லாம் சேராத சேராத என்று!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories