பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான மிகவும் வேண்டப்பட்ட நாடு என்ற அந்தஸ்தை உடனே நீக்குவது என அமைச்சரவை முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருள்களுக்கான சுங்கவரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப் பட்டது. அதன்படி, சுங்கவரி 200% அதிகமாக விதிக்க ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சுங்கவரி உயர்வு உடனடியாக அமல் ஆவதாக, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.