காஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்கள் சிலர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.
புல்மாவோ தாக்குதல் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துப் பதிந்த ராஜஸ்தானில் உள்ள நிம்ஸ் பல்கலையில் பிஎஸ்சி 2வது ஆண்டு படிக்கும் தல்வீன் மன்சூர், ஜோகிரா நசீர், உஸ்மா நசீர், பிபார்ம் 2ம் ஆண்டு படிக்கும் இக்ரா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலை வெளியிட்ட அறிக்கையில்: இவர்கள், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்ததைக் கொண்டாடும் வகையில், தேச விரோத புகைப்படங்களை பதிவிட்டதாகவும், இதுபோன்ற கண்டனத்திற்குரிய விஷயங்களை பல்கலை பொறுத்து கொள்ளாது என்றும், இதனால், மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நிறுவனங்களில் பணிபுரியும் சிலர், இது போல் தங்களது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் கருத்துப் பதிவுகளைச் செய்தனர்! அவை ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருந்ததால், நிறுவனங்களுக்கு சமூக ஊடகங்களில் வலம் வரும் சிலரே மின்னஞ்சல் புகார் அனுப்பியுள்ளனர். அவற்றைப் பரிசீலித்த அந் நிறுவனங்கள், சம்பந்தப் பட்ட நபர்கள் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்துபவர்கள் என்று குறிப்பிட்டு, பணிநீக்கம், சஸ்பெண்ட், விளக்கக் கேட்டு உள்ளிட்டவற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள இருசக்கர விற்பனை நிறுவனத்தில் பணிபுரியும் முகமது அஷ்ரப் என்ற ஊழியர், சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார்.