அய்யய்யோ ஸ்டாலின்! நாக்குல வசம்ப வெச்சி சுட்டாலும் வாசகம் ஒழுங்கா வராது போலிருக்கே..!

Published:

stalin press meet - 2026

அய்யய்யோ ஸ்டாலின்! நாக்குல வசம்ப வெச்சி சுட்டாலும் வாசகம் ஒழுங்கா வராது போலிருக்கே..! என்று கதறுகிறார்கள் திமுக.,வினர்.

மதுரையில் சித்திரைத் திருவிழா அன்று தேர்தல் நாள் வருவதால், பலரும் தேர்தல் நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது வேறு தேதியில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், மதுரைத் திருவிழா என்று சொல்லலாம், சித்திரைத் திருவிழா என்று சொல்லலாம், அழகர் ஆத்துல இறங்கற விழா என்றும் சொல்லலாம்… ஆனால் ஏதோ கல்லு விழா என்றும் கள்ள விழா என்றும் சொல்லி, அருகே நின்றிருக்கிற துரை முருகனை இடியாப்பச் சிக்கல் பார்வையினைப் பார்க்க வைத்திருக்கிறார்.

ஒரு புறம் ஸ்டாலின் சொல்வதை வசை பாடும் பலரும், துரை முருகன் அதற்குக் கொடுக்கும் ரியாக்சனைத்தான் பலமாகப் பார்த்துச் சிரித்து நகைக்கிறார்கள்.

இந்தக் காணொளிப் பதிவிலும், ஸ்டாலின் என்ன சொல்லுறாருன்னு நீங்களே ஒரு தடவைக்கு பல தடவை கேட்டு பாருங்க… நல்லா கேட்டு பாருங்க… நல்லா பாருங்க..!

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அது கள்ள விழா இல்லை கள்ளழகர் விழா; நாக்குல வசம்பு வெச்சு தேச்சாலும் தமிழ் வராதே உங்கொப்பா முத்தமிழ் வித்தவர் அய்ய்ய்யோ அய்ய்ய்யோ என்று அலறுகிறார் மைண்ட் வாய்ஸில் துரை முருகன்!

Related articles

Recent articles

spot_img