ஒரு கிராமத்துக்கான வாக்குறுதியையே நிறைவேற்றாத கனிமொழி தொகுதிக்கு என்ன செய்வார்? கேட்டால் திமுக, குண்டர்கள் மிரட்டல்!

kanimoshi karuna - 2026

தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறி கணக்கு காட்டிய நிதியைக் கூட சரியாக விடுவித்து சொன்னதைச் செய்யாத கனிமொழி, ஒட்டுமொத்த தொகுதிக்கும் என்ன செய்து விடுவார் என்று கேள்வி எழுப்புகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக வேல் என்பவர்.

அவர் இது குறித்து கூறிய தகவல்… நான் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா, ஶ்ரீவெங்கடேஸ்வரபுரம்(எ) பேய்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன். எங்களது கிராமம் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியால் தத்தெடுக்கப்பட்ட கிராமம்.

இந்த கிராமத்தை தத்தெடுத்த நேரத்தில் அவர் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம்!, ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்களது கிராமத்துக்கு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அவர் ஒதுக்கியதாக கூறிய தொகை ரூபாய் 3 கோடி. ஆனால் அவர் அறிவித்த தொகையில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நான் பெற்றேன். அந்தத் தகவல்களை ஆதாரமாக இணைத்துள்ளேன்..

kanimozhi scheme1 - 2026

கேள்வி 1. கனிமொழி எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெங்கடேஸ்வர புரம் பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அதற்கான பதிலாக கனிமொழி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி மூலமாக கீழ்க்காணும் பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  1. சாலைப்புதூர் ஆரம்ப சுகாதார மருந்தகம் அருகே பயணிகள் நிழற்குடை அமைத்தல் 3 லட்சம் மதிப்பீட்டில்
  2. தெற்கு பேய் குளத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆறரை லட்சம் மதிப்பில்
  3. சந்தோஷ புரத்தில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆறரை லட்சம் மதிப்பில்
  4. செங்குளம் ஆதிதிராவிடர் காலனியில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆறரை லட்சம் மதிப்பீட்டில் 5. வெங்கடேசபுரம் ஊராட்சியில் 2 லட்சம் லிட்டர் திறன்கொண்ட சம்பு அமைக்கும் பணி மோட்டார் ரூம் அமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் விரிவாக்கப்பணி 15 லட்சம் மதிப்பில்

கேள்வி-2 தொகையில் இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எத்தனை?

பதிலில் மேற்குறிப்பிட்ட 5 பணிகளும் டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு மேற்குறிப்பிட்ட 5 பணிகளும் டெண்டர் விடப்பட்டு வேலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இது 2016ஆம் வருடம் பெறப்பட்ட தகவல். இந்நேரம், இந்தப் பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் செய்யப் படவில்லை!

kanimozhi scheme2 - 2026

ஒரு கிராமத்துக்கு கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாமல் எந்தப் பணியும் செய்யாமல், மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டவர்கள், தூத்துக்குடி தொகுதிக்கு நன்மை செய்யவா போகிறார்கள்?!! – என்று கேள்வி எழுப்புகிறார் சண்முகவேல்

மேலும், நான் கனிமொழி எங்கள் கிராமத்துக்கு அளித்த “வாக்குறுதிகளை அவருக்கு நினைவூட்டும் விதமாக இந்தத் தகவல்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன்.. அதைப் பொறுத்துக் கொள்ள”முடியாத திமுக குண்டர்கள் எனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கின்றனர்.. மேலும் எங்களிடம் நேரடியாக மோத முடியாமல் எங்களுடைய கல்வி நிறுவனமான சங்கர் கல்வி அறக்கட்டளை மீது சேற்றைவாரிப் பூசும் வகையில் சில பொய்யான தகவல்களை திமுக.,வின் சமூக ஊடகப் பிரிவு பரப்பி வருகிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.. என்கிறார்.

இருப்பினும், சாலைப்புதூர் அரசு மருத்துவ மனைக்கு காமொன்ட் ஆர்ச் போடப்பட்டுள்ளது என்றும், கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்படவில்லை; 100 மரக் கன்றுகள் ஒரே இடத்தில் நடப்பட்டுள்ளது என்றும், இதுவரை மேல்நிலைத் தொட்டி எதுவும் செய்து கொடுக்கப் படவில்லை; பள்ளிகளுக்கு கழிவறையும் கட்டிக் கொடுக்கவில்லை என்றும் அந்தப் பகுதியினர் கூறுகின்றனர்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

ஒரு கிராமத்துக்கு செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி நிதி ஒதுக்குவதாகக் கூறி முறைகேடுகள் செய்து, எந்த பணியும் நடத்தித் தராமல் இந்த ஐந்து வருடத்தை ஓட்டியவர், இனி தொகுதிக்கு உறுப்பினராக வந்து நமக்கு என்ன செய்யப் போகிறார்? நமக்கு செய்வதாகக் கூறி அரசின் பணத்தை அவர்கள் முறைகேடு செய்து சுருட்டப் போகிறார்கள் அவ்வளவுதான் என்று பொருமுகின்றார்கள் இந்தப் பகுதி மக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories