கல்லான பெத்த மனசால் கதறும் பெண் சிசு பரபரப்பு….!

CHILED MISSING 2 - 2026
அன்னூரில் இன்று காலை புதரில் வீசப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது. அந்த சிசுவை வீசிவிட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அன்னூர்- கோவை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே அதிக பொதுமக்கள் கூடும் இடமாகும்.

இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் வழக்கமான வேலைகளுக்காக அந்த பகுதியில் சென்று வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு முட்பதரிலிருந்து குழந்தையின் அழும் குரல் கேட்டுள்ளது.

இதனையடுத்து பதறிய பொதுமக்கள் புதரை நீக்கி பார்த்தபோது அங்கு வெள்ளை துணி ஒன்றில் சுற்றப்பட்டு பிறந்த 2 நாட்களே ஆன அழகான பெண் குழந்தை கிடந்துள்ளது.

இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஆம்புலன்ஸ், மற்றும் அன்னுார் பேலீசுக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் பெண் சிசுவை மீட்டு ஆம்புலன்சில் அன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச்சென்ற தாயை தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அதன் தாய் வீசினாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 COMMENT

  1. எத்தனை தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கிறது? வருஷக் கணக்கில் தவம் கிடக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற சம்பவத்தில், பெற்ற சிசுவை அதுவும் ஓரிரு நாட்களே ஆன இளம் தளிரை ஈவு இரக்கமே இல்லாமல் வீசிவிட்டு செல்கின்றனர். பிறந்த உடனேயே அல்லது பிறந்தபின்னர் சில நாட்களிலேயே மரிக்கும் சிசுக்கள் உண்டு. அவற்றின் பெற்றோர்கள் எத்தனை மன உளைச்சலுக்கும் சொல்லவொண்ணா துன்பத்துக்கும் ஆளாகிறார்கள். குழந்தை ஒரு வரம். மழலை கேட்பது ஒரு தவம். மனிதனால் முயற்சி வேண்டுமானால் செய்யலாம். ஆனால் குழந்தை பிறப்பது நம்கையில் இல்லை. இது புரியாத முட்டாள்கள் குழந்தை உருவாக்கவே முயற்சி செய்திருக்கக் கூடாது. ஆனால் என்ன காரணமோ. பின்னர் எடுத்த முடிவு அப்படி. ஏதானாலும் புதரில் சிசுவை எறிந்தவர்களை மன்னிக்கவே முடியாது. மகா பாவிகள் தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories