கல்லான பெத்த மனசால் கதறும் பெண் சிசு பரபரப்பு….!

CHILED MISSING 2 - 2026
அன்னூரில் இன்று காலை புதரில் வீசப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது. அந்த சிசுவை வீசிவிட்டு சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அன்னூர்- கோவை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே அதிக பொதுமக்கள் கூடும் இடமாகும்.

இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் வழக்கமான வேலைகளுக்காக அந்த பகுதியில் சென்று வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு முட்பதரிலிருந்து குழந்தையின் அழும் குரல் கேட்டுள்ளது.

இதனையடுத்து பதறிய பொதுமக்கள் புதரை நீக்கி பார்த்தபோது அங்கு வெள்ளை துணி ஒன்றில் சுற்றப்பட்டு பிறந்த 2 நாட்களே ஆன அழகான பெண் குழந்தை கிடந்துள்ளது.

இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஆம்புலன்ஸ், மற்றும் அன்னுார் பேலீசுக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அன்னூர் போலீசார் பெண் சிசுவை மீட்டு ஆம்புலன்சில் அன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

அங்கு அந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச்சென்ற தாயை தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அதன் தாய் வீசினாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 COMMENT

  1. எத்தனை தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கிறது? வருஷக் கணக்கில் தவம் கிடக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற சம்பவத்தில், பெற்ற சிசுவை அதுவும் ஓரிரு நாட்களே ஆன இளம் தளிரை ஈவு இரக்கமே இல்லாமல் வீசிவிட்டு செல்கின்றனர். பிறந்த உடனேயே அல்லது பிறந்தபின்னர் சில நாட்களிலேயே மரிக்கும் சிசுக்கள் உண்டு. அவற்றின் பெற்றோர்கள் எத்தனை மன உளைச்சலுக்கும் சொல்லவொண்ணா துன்பத்துக்கும் ஆளாகிறார்கள். குழந்தை ஒரு வரம். மழலை கேட்பது ஒரு தவம். மனிதனால் முயற்சி வேண்டுமானால் செய்யலாம். ஆனால் குழந்தை பிறப்பது நம்கையில் இல்லை. இது புரியாத முட்டாள்கள் குழந்தை உருவாக்கவே முயற்சி செய்திருக்கக் கூடாது. ஆனால் என்ன காரணமோ. பின்னர் எடுத்த முடிவு அப்படி. ஏதானாலும் புதரில் சிசுவை எறிந்தவர்களை மன்னிக்கவே முடியாது. மகா பாவிகள் தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories