
கேரளாவில் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை அளித்த பாதிரியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஒரு சிறுவர் இல்லத்தில், ஏழை குடும்ப சிறுவர்களுக்கு தங்குமிடம், கல்வி, ஆகியவைகளை இலவசமாக அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு சிறுவர் இல்ல நிர்வாகியாக, கிருஸ்துவ பாதிரியார் ஜார்ஜ், எனபவர் வகித்து வந்தார்.
அவருக்கு வயது 40. அவர் அங்குள்ள சிறுவர்களிடம் ஓரின சேர்க்கைக்கு வற்புறித்தி வருவதுடன் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் அடுத்தடுத்து சிறுவர்கள் பலர் அந்த இல்லத்தை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அவர்களில் சில சிறுவர்கள், தங்கள் பெற்றோருக்கு தொலைபேசியில், தங்களிடம் பாலியியல் ரீதியாக துன்புறித்தி வரும் பாதிரியார் குறித்து புகார் கொடுத்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஜார்ஜ் மீது பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனா். .
அந்த புகாரின் அடிப்படையில், பாதிரியார் ஜார்ஜை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பல சம்பவங்கள் இந்தியாவின் பல இடங்களில் நடந்துவந்தாலும், தற்போது கேரளாவில் சிறுவர்களையும் வீட்டுவைக்காமல் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பர[பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


