December 7, 2025, 3:57 PM
27.9 C
Chennai

போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!

P C.PERUMAL - 2025

தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள்.

சிலை கடத்தலில் 2 தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சமீபத்தில் பொன்.மாணிக்கவேல் சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்..

அந்த போலீஸ் நிலையத்தில் சம்பவத்தன்று சுத்தம் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தியபோது பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிலை ஒன்று கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாலித்தீன் பையை பிரித்து பார்த்தபோது அந்த சிலை உலோகத்தால் ஆனது என்பதும், பெருமாள் சிலை என்பதும் தெரியவந்தது.

3 அடி உயரமும், 29 கிலோ எடையும் இருந்த சிலையை மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மன்னார்குடி தாசில்தார் கார்த்தியிடம் சிலையை ஒப்படைத்தார்.

போலீஸ் நிலையத்தில் கிடந்த பெருமாள் சிலையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆய்வுக்கு பிறகே சிலை ஐம்பொன்னால் ஆனதா? என்பது தெரிய வரும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையத்துக்குள் பெருமாள் சிலையை கொண்டு வந்து வைத்தது யார்?

தேவையற்ற பொருட்களுடன் அந்த சிலை கேட்பாரற்று கிடந்தது எப்படி?

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டதா? போலீசாருக்கே தெரியாமல் இத்தனை நாட்கள் பெருமாள் சிலை போலீஸ் நிலையத்துக்குள் கேட்பாரற்று கிடந்தது ஏன்?

சிலை எந்த கோவிலுக்கு சொந்தமானது? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories