மின்ஒளிக்கு தீபஒளி ஏற்றி பொங்கல் இட்டு திருவிழா கொண்டாடிய கிராமம்…!

NAKRI EB - 2026

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மின் இணைப்பு கிடைத்ததால் பொங்கல் வைத்து திருவிழா நடத்தி மகிழ்ந்த கிராம மக்கள்

சோழவந்தான் அருகே 25 ஆண்டுகளுக்குபிறகு மின் இணைப்பு கிடைத்ததால் பொங்கல் வைத்து திருவிழா நடத்தி கிராமமக்கள் மகிழ்ந்தனர்.

சோழவந்தான் அருகே அய்யங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது நகரி என்ற குக்கிராமம்.

இந்த கிராமம் திண்டுக்கல்- மதுரை நான்கு வழி சாலையில் கிழக்குப் புறத்தில் மெயின் ரோடு அருகே அமைந்துள்ளது.

இங்கு ஆதிதிராவிடர் வகுப்பை சுமார் 30 குடும்பங்கள் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் மின்வாரியத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

மின்சாரம் இல்லாமல் இந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள், பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் இரவில் மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி அந்த வெளிச்சத்திலேயே வசித்து வந்தனர்.

மேலும் தமிழக அரசு விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, டி.வி. போன்ற மின்சாரத்தால் இயங்கும் பொருட்களை இந்த கிராம மக்களுக்கு வழங்கி உள்ளது.

ஆனால் மின்சார வசதி மட்டும் இல்லை. பல்வேறு அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த கிராமமக்கள் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அரிக்கேன் விளக்குடன் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் ராஜசேகர் உத்தரவின் பேரில் மின் வாரிய உயர் அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்கி இப்பகுதிக்கு அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

இதனை அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடினார்கள். அவர்களுடைய குலதெய்வத்துக்கு சிறப்பு அபிஷேகம், பொங்கல் வைத்து பூஜைகள் செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

இதில் தங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க பல வகையில் உதவி செய்த மற்றும் முயற்சித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

தங்களது வீடுகளுக்கு மின் வசதி கிடைத்ததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் வைத்திருந்த தொலைக்காட்சிப் பெட்டி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய பொருட்களை தூசிதட்டி பயன்படுத்தினர்.

அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்தது நெஞ்சை நெகிழ வைத்தது. ஒவ்வொரு மக்களும் ஏதோ புது வாழ்விற்கு வந்தது போல் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories