குஜராத் போலீஸ் கான்ஸ்டபிளின் தீரம்! தோளில் சிறுமிகள்.. வெள்ளத்தில் ஒன்றரை கி.மீ.,!

Published:

gujaratpoliceman - 2026

அரபிக் கடல் ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தென் மேற்குப் பருவமழை காரணமாக, மும்பை, மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகள், கோவா, கர்நாடகம், கேரளம், குஜராத்தின் கட்ச் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ராணுவம், மீட்புக் குழுவினர்,  காவல்துறையினர், தன்னார்வத் தொண்டர்கள் என பல தரப்பினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் மழை வௌ்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை 1.5 கி.மீ துாரம் தனது தோள்களில் சுமந்து சென்ற காவல்துறை அதிகாரி பிருத்விராஜ் சிங் ஜடேஜா தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிட்டார். தன் தோள்களில் இரு சிறுமிகளைச் சுமந்து கொண்டு, வெள்ள நீரில் ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு அவர் நடந்து சென்ற வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.


A touching visuals of courage and dedication by #Gujarat Police Personnel ; #Morbi Police constable Pruthviraj Sinh Jadeja rescues two children by walking one and a half kilometers in flood water. #GujaratFloods

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img