ஆன்மீக கேள்வி பதில் – விநாயக சதுர்த்தி என்றால் விநாயகரின் பிறந்தநாளா? அல்லது விக்னாதிபதியாக பதவியேற்ற நாளா?

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் ஜெயந்தி நாள். சதுர்த்தி திதி கணபதிக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதை இருப்பார்கள். சதுர்த்தி திதியின் அதிதேவதி கணபதி.

இங்கு ஜெயந்தி, ஆவர்பவித்தல் என்ற சொற்களெல்லாம் நமக்கு புரிவதற்காக புராணங்கள் கூறும் பதங்கள். கணபதி ஒருமுறை பிறந்து பின் எப்போதோ மறையக்கூடியவர் அல்ல. எப்போதும் இருக்கும் தெய்வம் கணபதி.

சிவனும் பார்வதியும் புரிந்த தவத்தின் பலனாக கணபதி பாத்ரபத மாதம் சுக்ல சதுர்த்தி அன்று ஆவிர்பவித்தார். இதனை ‘வரதா சதுர்த்தி’ என்பர். பாத்ரபத மாதம் சுத்த சதுர்த்தியை விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இது புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் காணப்படும் அம்சம்.

இது மட்டுமின்றி இரண்டு வித சதுர்த்திகள் பிரதானமாக உள்ளன. சுத்த சதுர்த்தியை வரதா சதுர்த்தி என்றும் கிருஷ்ண சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கிறோம்.

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு என்னவென்றால்… பிரம்மதேவர் சிருஷ்டி தொடங்கியபோது தடைகள் ஏற்பட்டன. அவற்றை விலக்குவதற்கு பிரணவ தியானம் செய்தார். அந்த ஓங்கார சொரூபமே கணபதியாக சாக்ஷாத்காரமாகி விக்னங்களை நீக்கியது. அது கிருஷ்ண சதுர்த்தியன்று நடந்தது. அதனையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

மொத்தத்தில் சதுர்த்திக்கு இரண்டு வடிவங்கள். அவை கிருஷ்ண சதுர்ததி, சுக்ல சதுர்த்தி. அந்த இரண்டு வடிவங்களின் சதுர்த்தி திதிக்கும் கணபதியே அதிதேவதை. அதனால் அந்நாட்களில் கணபதியை வழிபடுகிறோம்.

விரும்பியவை கிடைக்க வேண்டுமென்ற இஷ்ட சித்திக்காக சுக்கிலபட்ச சதுர்த்தியன்று விநாயக சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று கிருஷ்ண சதுர்த்தியன்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்கிறோம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories