“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”

“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”

(எப்போதும் பிதற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருளிய பெரியவா)

சொன்னவர்-சரஸ்வதி அம்மாள் காஞ்சிபுரம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.

பெற்றோர்களின் இதயத்தில் பெரிய சூனியம் விழுந்தது.

‘இரண்டு வயசாச்சே,இன்னும் பேச்சு வரல்லே’.

வாயை மூடிக்கொண்டிருந்தாலாவது சரி – அதைக்காட்டிலும் கொடுமை – எப்போதும் பிதற்றிக் கோண்டேயிருக்கிறான்.

தொண்டை வலிக்காதா? உடல்நலம் கெடாதா?

கண்களில் பொங்கிவந்த நீரை துடைத்துக்கொண்டு கெஞ்சினாள், ராஜேஸ்வரி.

பெரியவாள் பதில் சொல்லவில்லை. ராஜேஸ்வரி,அவள் கணவன் ரங்கராஜன்,குழந்தை பாபு -மூவரையும் அலட்சியப்படுத்துவதைப் போல, பார்வையை வேறு எங்கங்கோ செலுத்திக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.

“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு…”

தொண்டர் வந்து கேட்டார்.

“தெரியாது..”

“சுலோகமாகப் படிக்காமல், ராகம்போட்டு பாட்டுப்போல பாடி – காஸெட்டுக்கு கூட வந்திருக்கே. காஸெட்டிலேர்ந்து பாட்டுப் போலவே பாடக் கத்துக்கோ, நீ பாடுகிறதை குழந்தை கேட்கட்டும்..”

ராஜேஸ்வரிக்கு பெரியவாளின் பூரண அனுக்ரஹம் கிடைக்கவில்லை என்பது போன்ற ஒரு குறைமனத்தில்தங்கிவிட்டதுஉ ண்மைதான். பெரியவாளின் உத்திரவை, முதலில் நிறைவேற்றிப் பார்ப்போம்.

இயல்பாகவே சங்கீத அபிமானி என்பதால்,மூகபஞ்சசதியின் பல சுலோகங்கள், ராக – தாளத்துடன் ராஜேஸ்வரியின் நெஞ்சில் விரைவில் பதிவாகி விட்டன.

டம்ளரில் பால் கொடுக்கும் போது,உணவு ஊட்டும் போது, குளிப்பாட்டும் போது, தூங்க வைக்கும் போது…..ஆனந்தபைரவியும், சிந்துபைரவியும், காபியும், நீலாம்பரியும், தேவகாந்தாரியும், அமீர்கல்யாணியும் அலை வீசின.

பாபு,காது கொடுத்துக் கேட்டான்;கவனமாகக் கேட்டான்.

அவனுள்ளே ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.

பிதற்றல் குறைந்துகொண்டே வந்து, ஒருநாள் நின்றே போயிற்று.அவனால் ஒரு தொந்திரவு இல்லை. அவ்வளவு அடக்கமான பையன்.

இவ்வளவு தான் போலிருக்கிறது,இந்தப் பிறவியில் என்ற சமாதானம் அமைதியைத் தந்தது.

சமையற்கட்டில், ராஜேஸ்வரியின் ஆனந்தபைரவி இனிமையாகக் கேட்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories