“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”

“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”

(எப்போதும் பிதற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருளிய பெரியவா)

சொன்னவர்-சரஸ்வதி அம்மாள் காஞ்சிபுரம்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.

பெற்றோர்களின் இதயத்தில் பெரிய சூனியம் விழுந்தது.

‘இரண்டு வயசாச்சே,இன்னும் பேச்சு வரல்லே’.

வாயை மூடிக்கொண்டிருந்தாலாவது சரி – அதைக்காட்டிலும் கொடுமை – எப்போதும் பிதற்றிக் கோண்டேயிருக்கிறான்.

தொண்டை வலிக்காதா? உடல்நலம் கெடாதா?

கண்களில் பொங்கிவந்த நீரை துடைத்துக்கொண்டு கெஞ்சினாள், ராஜேஸ்வரி.

பெரியவாள் பதில் சொல்லவில்லை. ராஜேஸ்வரி,அவள் கணவன் ரங்கராஜன்,குழந்தை பாபு -மூவரையும் அலட்சியப்படுத்துவதைப் போல, பார்வையை வேறு எங்கங்கோ செலுத்திக் கொண்டிருந்தார்கள்,பெரியவா.

“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு…”

தொண்டர் வந்து கேட்டார்.

“தெரியாது..”

“சுலோகமாகப் படிக்காமல், ராகம்போட்டு பாட்டுப்போல பாடி – காஸெட்டுக்கு கூட வந்திருக்கே. காஸெட்டிலேர்ந்து பாட்டுப் போலவே பாடக் கத்துக்கோ, நீ பாடுகிறதை குழந்தை கேட்கட்டும்..”

ராஜேஸ்வரிக்கு பெரியவாளின் பூரண அனுக்ரஹம் கிடைக்கவில்லை என்பது போன்ற ஒரு குறைமனத்தில்தங்கிவிட்டதுஉ ண்மைதான். பெரியவாளின் உத்திரவை, முதலில் நிறைவேற்றிப் பார்ப்போம்.

இயல்பாகவே சங்கீத அபிமானி என்பதால்,மூகபஞ்சசதியின் பல சுலோகங்கள், ராக – தாளத்துடன் ராஜேஸ்வரியின் நெஞ்சில் விரைவில் பதிவாகி விட்டன.

டம்ளரில் பால் கொடுக்கும் போது,உணவு ஊட்டும் போது, குளிப்பாட்டும் போது, தூங்க வைக்கும் போது…..ஆனந்தபைரவியும், சிந்துபைரவியும், காபியும், நீலாம்பரியும், தேவகாந்தாரியும், அமீர்கல்யாணியும் அலை வீசின.

பாபு,காது கொடுத்துக் கேட்டான்;கவனமாகக் கேட்டான்.

அவனுள்ளே ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.

பிதற்றல் குறைந்துகொண்டே வந்து, ஒருநாள் நின்றே போயிற்று.அவனால் ஒரு தொந்திரவு இல்லை. அவ்வளவு அடக்கமான பையன்.

இவ்வளவு தான் போலிருக்கிறது,இந்தப் பிறவியில் என்ற சமாதானம் அமைதியைத் தந்தது.

சமையற்கட்டில், ராஜேஸ்வரியின் ஆனந்தபைரவி இனிமையாகக் கேட்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories