December 6, 2025, 3:27 AM
24.9 C
Chennai

அரங்கன் ஆலயத்தில் முதலாழ்வார்கள் வைபவம்!

srirangam muthal alwargal - 2025

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் முதலாழ்வார்களாகிய ஸ்ரீபொய்கை ஆழ்வார், ஸ்ரீபூதத்தாழ்வார், ஸ்ரீபேயாழ்வார் ஆகியோர் திருவீதி புறப்பாடு கண்டருளினர். ஸ்ரீபேயாழ்வாரின் அவதார திருநக்ஷத்திர தினமான ஐப்பசி சதயம் இன்று காலை சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளினர்.

காலை 9.30 மணிக்கு ஸ்ரீ.ரங்கநாதர் மூலவர் ஸன்னதிக்கு எழுந்தருளிய ஆழ்வார்கள் அங்கு மங்களாஸாஸனம் கண்டருளி, பெருமாள் மாலை மரியாதைகளை பெற்றுக் கொண்டு பின்னர் ஸ்ரீ.நம்மாழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளி அங்கு மாலை மரியாதை கண்டருளினர்.

பின் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதிகளில் எழுந்தருளி பின்னர் வடக்கு சித்திரை வீதியில் தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.

அங்கு மங்களாஸாஸனம் முடிந்து, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி புறப்பாடு கண்டருளிய பின்னர், தெற்கு சித்திரை வீதியின் ஒரு பகுதி வழியாக ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் எழுந்தருளினர்.

srirangam muthal azhwar3 - 2025

பின்னர், உள் ஆண்டாள் ஸன்னதியில் மங்களாஸாஸனம் ஆகி பின்னர் முதலாழ்வார்களின் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.

வீதி புறப்பாட்டின் போது, புறப்பாடு தொடங்கிய இடத்தில் இருந்து ஸ்ரீபொய்கை ஆழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி கோஷ்டியும், அடுத்து ஸ்ரீ.ரங்கநாயகித் தாயார் ஸன்னதியில் இருந்து எழுந்தருளிய பிறகு வடக்கு சித்திரை வீதியில் ஸ்ரீ.பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதியும், பின்னர் ஸ்ரீ.ஆண்டாள் ஸன்னதியில் இருந்து எழுந்தருளிய பிறகு ஸ்ரீ.பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியும் கோஷ்டி ஆனது.

srirangam muthal azhwar4 - 2025

ஆழ்வார்கள் ஸன்னதிக்கு எழுந்தருளிய பின்னர் ஸ்ரீ.பெரிய பெருமாளின் அலங்காரங்கள் ஆழ்வார்களுக்கு அளிக்கப்பட்டு, பின்னர் கோயில் திருவாய்மொழி கோஷ்டி ஆகி சாற்றுமுறை ஆனது.

  • தகவல்: ராகவன் நெம்மேலி விஜயராகவாச்சாரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories