அரங்கன் ஆலயத்தில் முதலாழ்வார்கள் வைபவம்!

srirangam muthal alwargal - 2026

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் முதலாழ்வார்களாகிய ஸ்ரீபொய்கை ஆழ்வார், ஸ்ரீபூதத்தாழ்வார், ஸ்ரீபேயாழ்வார் ஆகியோர் திருவீதி புறப்பாடு கண்டருளினர். ஸ்ரீபேயாழ்வாரின் அவதார திருநக்ஷத்திர தினமான ஐப்பசி சதயம் இன்று காலை சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளினர்.

காலை 9.30 மணிக்கு ஸ்ரீ.ரங்கநாதர் மூலவர் ஸன்னதிக்கு எழுந்தருளிய ஆழ்வார்கள் அங்கு மங்களாஸாஸனம் கண்டருளி, பெருமாள் மாலை மரியாதைகளை பெற்றுக் கொண்டு பின்னர் ஸ்ரீ.நம்மாழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளி அங்கு மாலை மரியாதை கண்டருளினர்.

பின் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதிகளில் எழுந்தருளி பின்னர் வடக்கு சித்திரை வீதியில் தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.

அங்கு மங்களாஸாஸனம் முடிந்து, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி புறப்பாடு கண்டருளிய பின்னர், தெற்கு சித்திரை வீதியின் ஒரு பகுதி வழியாக ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் எழுந்தருளினர்.

srirangam muthal azhwar3 - 2026

பின்னர், உள் ஆண்டாள் ஸன்னதியில் மங்களாஸாஸனம் ஆகி பின்னர் முதலாழ்வார்களின் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.

வீதி புறப்பாட்டின் போது, புறப்பாடு தொடங்கிய இடத்தில் இருந்து ஸ்ரீபொய்கை ஆழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி கோஷ்டியும், அடுத்து ஸ்ரீ.ரங்கநாயகித் தாயார் ஸன்னதியில் இருந்து எழுந்தருளிய பிறகு வடக்கு சித்திரை வீதியில் ஸ்ரீ.பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதியும், பின்னர் ஸ்ரீ.ஆண்டாள் ஸன்னதியில் இருந்து எழுந்தருளிய பிறகு ஸ்ரீ.பேயாழ்வார் அருளிச் செய்த மூன்றாம் திருவந்தாதியும் கோஷ்டி ஆனது.

srirangam muthal azhwar4 - 2026

ஆழ்வார்கள் ஸன்னதிக்கு எழுந்தருளிய பின்னர் ஸ்ரீ.பெரிய பெருமாளின் அலங்காரங்கள் ஆழ்வார்களுக்கு அளிக்கப்பட்டு, பின்னர் கோயில் திருவாய்மொழி கோஷ்டி ஆகி சாற்றுமுறை ஆனது.

  • தகவல்: ராகவன் நெம்மேலி விஜயராகவாச்சாரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories