திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது .
கார்த்திகை தீபத் திருவிழாவான இன்று, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.