வைகுண்ட ஏகாதசி திருநெடுந்தாண்டகம் தொடக்கம்!

srirangam namperumal firstday alankaram2 - 2026

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

பூலோக வைகுண்டம் என்றும் வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பகல் பத்து ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாள்களுக்கு வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது தொடர்ந்து சந்தன மண்டபத்தில் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன

பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாள் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான ஜனவரி 5ஆம் தேதி இரவு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்

srirangam namperumal firstday alankaram1 - 2026

மறுநாள் 6ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது உற்சவ நாட்களில் திருமங்கை மன்னனின் வேடுபரி நிகழ்ச்சியை தவிர மற்ற ஒன்பது நாட்கள் சொர்க்க வாசல் திறந்தே இருக்கும்

srirangam namperumal firstday alankaram3 - 2026

ஜனவரி 16 ஆம் தேதி நம்மாழ்வார் மாற்றத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது

வைகுண்ட ஏகாதசி உற்சவம் தொடக்க நாள் முதல் நிறைவு பெறும் நாள் வரை மூலவர் எம்பெருமான் முத்தங்கி சேவை சாதிக்கிறார்

srirangam namperumal firstday alankaram4 - 2026

படங்கள் மற்றும் வீடியோ தொகுப்பு: விஜயராகவன் கிருஷ்ணன், ஸ்ரீரங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories