ஸித்திகள் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலையைக் குறிக்கிறதா? ஆச்சார்யாள் பதில்!

abinav vidhya theerthar
abinav vidhya theerthar

சிஷ்யன் : ஞானிகளுக்கு எப்போதும் எல்லா விதமான ஸித்திகளும் இருக்குமா?

ஆச்சார்யாள் : இல்லை. ஒரு ஞானியின் பிராரப்தம் அவ்வாறிருந்தால் அவனிடம் ஸித்திகளை நாம் காணலாம். ஞானி விரும்பினால் எந்த ஸித்தியை வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் அவ்வாறு ஆசை ஏற்படும் என்பது கேள்விக்குரிய விஷயம்.

சி : ஸித்திகள், ஒருவன் அத்யாத்ம வாழ்வில் மேல்நிலை அடைந்ததைக்
குறிக்கின்றனவா?

ஆ : இல்லவேயில்லை. ஸித்திகள், சில மூலிகைகளினாலும், சில துர்தேவம்தைகளின் உபாஸனையாலும் கிடைக்கலாம்.

சி : ஞானியானவன், எித்திகளினால் எந்த விஷயத்திலாவது பாதிக்கப்படுகிறானா?

ஆ : இல்லை. அவனுக்கு ஸித்திகளில் சிறிதளவும் கவனமில்லை. ஸித்திகள் வரப்பெறலாம், அல்லது வராமலிருக்கலாம். ஆனால் அதைப்பற்றி ஒரு ஞானி கவலைப்படுவதேயில்லை ,

சி: இந்திரஜாலத்தின் மூலம் காண்பது எல்லாமே ப்ரமை என்று சொல்ல முடியுமா? அல்லது இவை வேறு சக்தியினால் ஏற்படுகின்றனவா?

ஆ : சாமான்யமாக கைகளாலோ மறைமுகமாகவோ ஏதாவது செய்தால் அது இந்திரஜாலம் ஆகும். சில சமயங்களில் விசேஷமான சக்தியினாலும் இவையெல்லாம் ஏற்படலாம்

சி: சில ஜனங்கள் மஞ்சட்காமாலை போன்ற வியாதிகளை சுலபமாகக் குணப்படுத்துகிறார்கள், உதாரணத்திற்கு ஒரு பாத்திரத்தில் ஜலத்தை வைத்து அதில் ஏதோ செய்தவுடன் நீர் மஞ்சளாகி விடுகிறது. நோயாளியின் கண் சரியாகி வியாதியும் அகலுகிறது. இம்மாதிரி பல அபூர்வ நிகழ்ச்சிகள் எவ்வாறு நடக்கின்றன?

ஆ: வேறு வகையில் நடைபெறலாம் என்றாலும் சாமான்யமாக அவை மந்திரம் மூலமாக நடைபெறுகின்றன. இதுபோல் குணப்படுத்துபவர்கள் பொதுவாகப் பணமொன்றும் வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சேவையாகத்தான் இதைச் செய்துகொண்டு வருகிறார்கள். நான் பார்த்த அளவில், மற்ற ஜனங்களுக்கு இவர்கள் அம்முறையை உபதேசம் செய்தால் அந்த மந்திரங்களின் சக்தி போய்விடுகிறது

சி: அப்படியென்றால் அவர்கள் எப்படி மற்ற மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்?

ஆ : அவர்கள் சாமான்யமாகத் தம் புதல்வர்களுக்கோ, சிஷ்யர்களுக்கோ சொல்லிக் கொடுத்து விட்டு, தாம் அவ்வாறு செய்வதை விட்டு விடுகிறார்கள்

சி: சில சமயங்களில் படத்திலிருந்து விபூதி விழுவதையும், வேறு சில விசேஷமான நிகழ்ச்சிகளையும் நாம் காண்கிறோம். இவை எதனால் ஏற்படுகின்றன என்று ஆசார்யாள் சொல்லுவார்களா?

ஆ : சில சமயங்களில் ஏதாவது க்ஷத்ர தேவதையின் ப்ரபாவத்தினால் இம்மாதிரி ஏற்படலாம். மற்ற சமயங்களில் ஒருவனின் ஸங்கல்பத்தினால் ஏற்படலாம். இதைத் தவிர ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. சில சமயங்களில் இறைவன் தான் இருக்கிறேன் என்று காட்டுவதற்காக இம்மாதிரி ஏதாவதொன்றைச் செய்யலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories