February 22, 2026, 1:30 AM
26.7 C
Chennai

விடுதலையும், மகிழ்வும் எதில் இருக்கிறது? ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2026

ஈச்வர ஸாக்ஷாத்காரத்தை முக்தி என்றும் கூறலாம். முக்தி என்றால் “விடுதலை” என்று அர்த்தம். எதிலிருந்து விடுதலை? பந்தங்களிலிருந்து விடுதலை.

“பந்தம்” என்று இங்கு எதைக் குறிப்பிடுகிறோம்? பிறப்பு –இறப்பு விஷயங்களே பந்தம் என அழைக்கப்படுகின்றன.

இப்போது இந்த வாழ்க்கை கிடைத்து இருக்கிறது. இதற்கு முன்பு எத்தனையோ பிறவிகள் கிடைத்தாயிற்று. இன்னும் எத்தனையோ பிறவிகள் வர இருக்கின்றன!

இங்கு ஒரு கேள்வி எழலாம். “பிறவிகள் ஏற்பட்டால் என்ன? இதனால் என்ன பெரிய பிரச்சினை வந்துவிடப் போகிறது?” என்று சிலர் நினைக்கலாம்.

மீண்டும் மீண்டும் பிறப்பு-இறப்புச் சக்கரத்தில் உழல்வதால் மனிதன் சந்தோஷத்தை இழந்துவிடுகிறான். இதுதான் பிரச்சினை!

மீண்டும் ஒரு கேள்வி எழலாம். “என்ன இது ஸ்வாமிகளே! சந்தோஷம் இல்லை எனக் கூறுகிறீர்களே? நாங்கள் செளக்கியமாகச் சாப்பிடுகிறோமே!” செளக்கியமாகத் தூங்குகிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறோமே! என்று கேட்டால், இங்கு நாம் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். நன்றாகச் சாப்பிட்டுத் தூங்குவது உண்மையான சந்தோஷத்திற்குக் காரணமாகி விடுமா? நிச்சயமாக இல்லை.

ஏனெனில், இவை நிரந்தரமானதல்ல. இம்மாதிரியான சந்தோஷங்களுக்கு ஒரு முடிவு உண்டு. அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் வைத்தியரிடம் போக வேண்டிய நிலை உண்டாகிவிடுகிறது.

உணவில் சுவை அதிகமாக அதிகமாக நாம் வைத்தியரிடம் போக வேண்டிய தேவையும் அதிகமாகிறது. எனவே இது போன்ற இன்பத்தால் என்ன பயன்? அவ்வாறே ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின்னர் நாம் எழுந்ததும், சரீர உபாதைகள், அலுவலக கஷ்டங்கள், குடும்பத் தொல்லைகள் என்று பல்வேறு எண்ணங்கள் நம் மனதிற்கு வந்துவிடுகின்றன.

நாம் அலுவலகத்திற்குச் சென்று அனைவரிடமும் படவேண்டிய கஷ்டத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, தூக்கமும் நிலையான சந்தோஷத்தைத் தருவதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories