December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

பிற பெண்களிடம் ஆண்களின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?

ram - 2025

இராமாயணத்தில் சீதையைக் கடத்திச் சென்ற பின்னர் இராமருக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டது. சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக சுக்ரீவனும் வாலியைக் கொல்வதாக இராமரும் பரஸ்பரம் உறுதியளித்தனர்.

இராமர் பெரும் வருத்தத்துடன் சுக்ரீவனிடம் புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது சுக்ரீவன் மொழிந்தான், கொடிய செயல்களைச் செய்யும் ஓர் அரக்கனால் ஒரு பெண் அபகரித்துச் செல்லப்படுவதை நான் கண்டேன்.

அவள் உமது பத்தினியாகத்தான் இருக்க வேண்டுமென்று தற்போது யூகிக்கின்றேன். அவள் பரிதாபமான குரலில் ’இராமா, இலக்ஷ்மணா என்று கதறிக் கொண்டிருந்தாள்.

மலைச் சிகரத்தில் என்னையும் இதர வானரங்களையும் கண்டபோது, அவள் தமது மேலாடையில் முடித்து வைத்திருந்த அணிகலன்களைக் கீழே போட்டாள். நாங்கள் அவற்றை பத்திரமாக வைத்துள்ளோம்.” மகிழ்ச்சி தரும் இச்சொற்களைக் கேட்ட இராமர், அவற்றைக் காண பேராவல் கொண்டார்.

மலைக்குகையில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த அந்நகைகளைக் கொண்டு வந்து இராமரிடம் வழங்கினான் சுக்ரீவன். அணிகலன்களைக் கண்ட இராமர் பனியினால் மூடப்பட்ட நிலாவைப் போன்று கண்ணீரால் மறைக்கப்பட்டு காட்சியை இழந்தார்.

பெருந்துயரத்துடன் கூடிய சினத்தில் புலம்பினார், பெருமூச்சுவிட்டார். அருகிலிருந்த இலக்ஷ்மணரிடம் பரிதாபத்துடன் பேசினார், இலக்ஷ்மணா, கடத்தப்பட்ட வைதேகியின் அணிகலன்களைப் பார்.”

அண்ணியார் தமது புஜத்தில் அணியும் வங்கியை நான் பார்த்தறியேன், காதில் அணியும் குண்டலங்களையும் பார்த்தறியேன்.

நாள்தோறும் அவரது திருவடிகளில் விழுந்து சேவித்தமையால், இந்த பாதச் சிலம்புகளை மட்டும் நான் நன்றாக அடையாளம் காண்கிறேன்.” என கூறிய இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள்.

பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை கவனமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை;

மாறாக, என்றென்றும் அவளது தாமரைத் திருவடிகளை தமது தியானத்தில் அமர்த்தியிருந்தார். அவருடைய பக்தியையும் பணிவையும் ஒழுக்கத்தையும் என்னவென்று சொல்வது! நினைத்துப் பூரித்தலே ஆனந்தமளிப்பதாக உள்ளது.

இது மனைவி தவிர பிற பெண்களிடம் ஆண்களின் மனோபாவம் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற மாண்பை உணர்த்தும் நிகழ்வாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories