December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

ஜீவன் முக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2025

ஜீவன் முக்தி

ஜீவன் முக்தி அத்வைத ஸித்தாந்த நூலில் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஸ்ருதியும் அநேக வழிகளில் ஆதரிக்கிறது, உதாரணமாக
“अत्र ब्रह्म समश्र्नुते”
என்ற வாக்கின் மூலம் இந்த சரீரம் இருக்கும் பொழுதே முக்தி பெறுவது தான் ஜீவன் முக்தி என்பது தெரிகிறது.

சிரவணம் மனனம் மற்றும் நிதித்யாஸனம்
(கேட்பது, மனம் நிலைத்தல், தியானம்) ஆகியவைகளை ஆழ்ந்த அப்பியாசம் செய்து மனத்தையும் வாசனைகளையும் அழித்தபின் ஜீவன் முக்தி கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஜீவன் முக்தி அடைந்த அவனுடைய நிலை எப்படி இருக்கும் என்று ஸ்ரீ ஸதாசிவ பிரஹமேந்த்ரரின் கீழ்கண்ட ஸ்லோகம் விவரிக்கிறது..

சூரியனே குளிர்ச்சி அடைந்தாலும் அல்லது சந்திரனே சூடாக ஆகிவிட்டாலும் நெருப்பு கீழ்நோக்கி ஜ்வாலை விட்டாலும் கூட ஜீவனுக்கு வியப்பு ஏற்படாது.. இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஜனகரும்
“மிதிலை நகரமே எரிந்து போனாலும் எனக்கு எவ்விளைவும் ஏற்படாது” என்று குறிப்பிடுகிறார். எப்பொழுதும் எங்கும் ப்ரஹமத்தை ஸச்சிதானந்த (ஸத்யம் சித், ஆனந்தம்) உருவத்தில் காணும் ஜீவனுக்கு எந்த விளைவும் ஏற்படாது என்பதை இது காண்பிக்கிறது.

கிருஷ்ணபகவான் ஜீவன் முக்தனிடம் காணப்படும் குணங்களை சித்தரித்திருக்கிறார். ஜீவன் முகத்துக்கு எதனிடமும் த்வேஷம் கிடையாது. புகழையும் கண்டனத்தையும் சமமாக கருதுகின்ற அவன், மௌனமாகவும் திருப்தி உள்ளவனாகவும், தங்க இடம் இல்லாதவனாகவும், திட சித்தம் கொண்டவனாகவும் பக்தி கொண்டவனாகவும் இருக்கிறான். இப்படிப்பட்டவனை எனக்கு பிடிக்கும் என்பது பகவானின் அருள்வாக்கு.

சுகர் வாமதேவர் தத்தாத்ரேயர் ஆகியோர் புகழ்பெற்ற ஜீவன் முக்தர்கள். சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹமேந்திரரும் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமிகளும் ஸ்ரீமத் அபிநவ வித்யார்த்தீர்த்த மஹாஸ்வாமிகளும் ஜீவன் முக்தருக்கு பெரிய உதாரணங்கள்.. அவர்களுடைய பெயர்களை ஜபித்தாலே நன்மைகள் பல கிடைக்கும். மானிட ஜன்மம் எடுத்ததின் உன்னத லட்சியம் முக்தி பெறுவதே. ஞானம் உதயமான அந்தக் க்ஷணத்திலேயே இந்த நிலை கிட்டிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories