December 6, 2025, 8:39 AM
23.8 C
Chennai

அன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம்:

காஞ்சியில் அமைந்துள்ள சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சி மடத்தில் உள்ள பீடாதிபதிகள் அனைவருக்கும் இந்த்ர சரஸ்வதீ என்ற பட்டம் உண்டு. முன்னர் இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளால் கண்டெடுக்கப்பட்ட தமிழ் ரத்தினம் ஸ்ரீ ஜயேந்திரர். இருள்நீக்கி இருள் மண்டிக் கிடந்த இடங்களில் எல்லாம் ஆன்ம ஒளி கூட்ட சன்யாச பீடத்தை அலங்கரித்த புண்ணியர்.

மடம் என்பது ஆன்மிக விஷயங்களுக்கு மட்டும்தான் என்று மடிசஞ்சிகள் கூறிக் கொண்டிருந்த காலத்தில், துணிந்து, சமூக நலப் பணிகளில் மடத்தின் அன்றாட நடவடிக்கைகளை திசை திருப்பியவர். இந்து சமூகத்தின் ஒரு பிரிவினர் மடத்துக்கு அன்னியப் பட்டு ஒதுங்கியிருந்த காலத்தில், அவர்களை நோக்கி மடத்தின் ஆன்மிகத் தொண்டுகளை எடுத்துச் சென்றவர். இதனாலேயே பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வ்தி சுவாமிகள்.

மதமாற்றங்கள் நிகழும் இடங்கள் என கருதப்பட்ட இடங்களில் சுவாமிகளால் துவங்கப்பட்ட அமைப்புகள் சென்றன. இந்து சமூகத்தின் அங்கம் இவை எனக் கூறி, தொண்டுகளைச் செய்யத் தலைப்பட்டன. காஞ்சி மடத்துக்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவும் அதன் மூலமாகவே பின்னாளில் சதி வழக்குகளில் சிக்கிக் கொண்டதும் தனிக் கதை.

ஆயினும், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும், வட இந்தியாவிலும் இவர் ஆற்றிய தொண்டுப் பணிகள் இன்றளவும் மக்களால் நன்றி கூரப்படுகின்றன. நாடெங்கும் காஞ்சி மடத்துக்கு அன்பர் கூட்டம் பெருகக் காரணமாக இருந்ததும் ஸ்ரீஜயேந்திரரின் சமூகத் தொண்டுப் பணிகள்தான்!

இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக… இந்தப் படங்கள் தொகுப்பு!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories