அன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம்:

காஞ்சியில் அமைந்துள்ள சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சி மடத்தில் உள்ள பீடாதிபதிகள் அனைவருக்கும் இந்த்ர சரஸ்வதீ என்ற பட்டம் உண்டு. முன்னர் இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளால் கண்டெடுக்கப்பட்ட தமிழ் ரத்தினம் ஸ்ரீ ஜயேந்திரர். இருள்நீக்கி இருள் மண்டிக் கிடந்த இடங்களில் எல்லாம் ஆன்ம ஒளி கூட்ட சன்யாச பீடத்தை அலங்கரித்த புண்ணியர்.

மடம் என்பது ஆன்மிக விஷயங்களுக்கு மட்டும்தான் என்று மடிசஞ்சிகள் கூறிக் கொண்டிருந்த காலத்தில், துணிந்து, சமூக நலப் பணிகளில் மடத்தின் அன்றாட நடவடிக்கைகளை திசை திருப்பியவர். இந்து சமூகத்தின் ஒரு பிரிவினர் மடத்துக்கு அன்னியப் பட்டு ஒதுங்கியிருந்த காலத்தில், அவர்களை நோக்கி மடத்தின் ஆன்மிகத் தொண்டுகளை எடுத்துச் சென்றவர். இதனாலேயே பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வ்தி சுவாமிகள்.

மதமாற்றங்கள் நிகழும் இடங்கள் என கருதப்பட்ட இடங்களில் சுவாமிகளால் துவங்கப்பட்ட அமைப்புகள் சென்றன. இந்து சமூகத்தின் அங்கம் இவை எனக் கூறி, தொண்டுகளைச் செய்யத் தலைப்பட்டன. காஞ்சி மடத்துக்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவும் அதன் மூலமாகவே பின்னாளில் சதி வழக்குகளில் சிக்கிக் கொண்டதும் தனிக் கதை.

ஆயினும், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும், வட இந்தியாவிலும் இவர் ஆற்றிய தொண்டுப் பணிகள் இன்றளவும் மக்களால் நன்றி கூரப்படுகின்றன. நாடெங்கும் காஞ்சி மடத்துக்கு அன்பர் கூட்டம் பெருகக் காரணமாக இருந்ததும் ஸ்ரீஜயேந்திரரின் சமூகத் தொண்டுப் பணிகள்தான்!

இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக… இந்தப் படங்கள் தொகுப்பு!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories