அன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சிபுரம்:

காஞ்சியில் அமைந்துள்ள சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சி மடத்தில் உள்ள பீடாதிபதிகள் அனைவருக்கும் இந்த்ர சரஸ்வதீ என்ற பட்டம் உண்டு. முன்னர் இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளால் கண்டெடுக்கப்பட்ட தமிழ் ரத்தினம் ஸ்ரீ ஜயேந்திரர். இருள்நீக்கி இருள் மண்டிக் கிடந்த இடங்களில் எல்லாம் ஆன்ம ஒளி கூட்ட சன்யாச பீடத்தை அலங்கரித்த புண்ணியர்.

மடம் என்பது ஆன்மிக விஷயங்களுக்கு மட்டும்தான் என்று மடிசஞ்சிகள் கூறிக் கொண்டிருந்த காலத்தில், துணிந்து, சமூக நலப் பணிகளில் மடத்தின் அன்றாட நடவடிக்கைகளை திசை திருப்பியவர். இந்து சமூகத்தின் ஒரு பிரிவினர் மடத்துக்கு அன்னியப் பட்டு ஒதுங்கியிருந்த காலத்தில், அவர்களை நோக்கி மடத்தின் ஆன்மிகத் தொண்டுகளை எடுத்துச் சென்றவர். இதனாலேயே பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வ்தி சுவாமிகள்.

மதமாற்றங்கள் நிகழும் இடங்கள் என கருதப்பட்ட இடங்களில் சுவாமிகளால் துவங்கப்பட்ட அமைப்புகள் சென்றன. இந்து சமூகத்தின் அங்கம் இவை எனக் கூறி, தொண்டுகளைச் செய்யத் தலைப்பட்டன. காஞ்சி மடத்துக்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவும் அதன் மூலமாகவே பின்னாளில் சதி வழக்குகளில் சிக்கிக் கொண்டதும் தனிக் கதை.

ஆயினும், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும், வட இந்தியாவிலும் இவர் ஆற்றிய தொண்டுப் பணிகள் இன்றளவும் மக்களால் நன்றி கூரப்படுகின்றன. நாடெங்கும் காஞ்சி மடத்துக்கு அன்பர் கூட்டம் பெருகக் காரணமாக இருந்ததும் ஸ்ரீஜயேந்திரரின் சமூகத் தொண்டுப் பணிகள்தான்!

இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக… இந்தப் படங்கள் தொகுப்பு!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories